புதுச்சேரி : புதுச்சேரியில் ஜவுளிக்கடையின் மேல்தளத்தை உடைத்து உள்ளே நுழைந்து 1 லட்சத்தி 70 ஆயிரம் ரூபாய் பணம் திருடி சென்ற மர்ம நபரை சிசிடிவி காட்சிகள் கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி நேரு வீதியில் மூன்று தளங்களுடன் ஹை பேஃஷன் என்கிற ஜவுளி கடை இயங்கி வருகிறது, இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி காலை கடையின் ஊழியர்கள் கடையை திறந்து உள்ளே சென்று போது அங்கிருந்த பணம் வைக்கும் கல்லா பெட்டி திறந்து அதில் இருந்த ரூ-.1 லட்சத்தி 70 ஆயிரம் ரூபாய் பணம் திருட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இது குறித்து கடையின் உரிமையாளர் செந்தில் பெரிய கடை காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது நள்ளிரவு மர்ம நபர் யாரோ கடையின் மேல் தளத்தை உடைத்து உள்ளே வந்து கல்லா பெட்டியில் இருந்த பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராகளை ஆய்வு செய்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் பை மாட்டிகொண்டு நள்ளிரவு 1 மணிக்கு நேரு விதியில் செல்வதும், பின்னர் காலை 4 மணி அளவில் அதே வழியாக வருவதும் பதிவாகி இருந்ததை அடுத்து சிசிடிவி காட்சிகளை வெளியீட்டு கடையின் மேல் தளத்தை உடைத்து பணம் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.