மதுரை: விருதுநகரில் டாஸ்மாக் கடையை துளையிட்டு பல ஆயிரம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் பனைநகரில் அரசு மதுபான டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு நேற்று வழக்கம்போல் மதுபான விற்பனையார் கடையை பூட்டிவிட்டு சென்றவர் இன்று திறக்க வந்து திறந்து பார்த்த போது கடையை துவாரம் போட்டு மதுபான பாட்டில்கள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து விருதுநகர் பஜார் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த போது பல ஆயிரம் மதிப்பிலான பீர் பாட்டில் பெட்டில்கள், மற்றும் பல ரக மதுபானபாட்டில் பெட்டிகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு எதுவும் தடயம் சிக்கியுள்ளதா என சோதனை செய்து வருகின்றனர்.
மேலும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
This website uses cookies.