Categories: தமிழகம்

ஆளில்லா வீடுகளை நோட்டமிடும் மர்மநபர்கள்…அடுத்தடுத்து வீடுகளில் கைவரிசை: நள்ளிரவு கொள்ளையர்களால் அச்சத்தில் திண்டுக்கல் மக்கள்..!!

திண்டுக்கல்: அடுத்தடுத்து வீடுகளில் நடந்த தொடர் கொள்ளையால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

திண்டுக்கல் MVM நகர் ராமசாமி காலனி 7வது தெருவில் வழக்கறிஞர் ஆரோக்கிய அருள்சாமி. இவர் தனது வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்றுள்ளார். வீடு பூட்டியதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் நேற்று நள்ளிரவு வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த 10 சவரன் நகையை கொள்ளை அடித்தனர்.

மேலும் வீட்டில் என்னென்ன திருடு போனது என வீட்டின் உரிமையாளர் ஆரோக்கிய அருள்தாஸ் வந்த பின்பு தான் தெரியும். சம்பவம் குறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அருகில் உள்ள எம்விஎம் நகர் 7வது குறுக்குத் தெருவில் வசிப்பவர் ராஜகோபால். இவர் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் பெங்களூரில் வசிக்கும் தனது மகன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை அடித்துள்ளனர். அதேபோல் எம்விஎம் நகர் 4வது குறுக்குத் தெருவில் வசித்து வரும் வழக்கறிஞர் வீனஸ் என்பவர் அமெரிக்காவில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதை அறிந்த திருடர்கள் வீட்டை உடைத்து கொள்ளை முயற்சி செய்துள்ளனர். அமெரிக்காவில் இருந்தபடி லீனஸ் வீட்டில் சிசிடிவி கேமரா மற்றும் சுற்றுப்புறச் சுவர்களில் அலாரம் அடிக்க செய்து கொள்ளையர்களை எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் அங்கிருந்த கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

எம்விஎம் நகரில் திருடு போனது குறித்து திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது மேலும் தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்துள்ளனர். ஒரே நாளில் இரண்டு வீடுகளில் திருடு போனது ஒரு வீட்டில் திருட முயற்சி செய்த சம்பவங்கள் திண்டுக்கல் மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

UpdateNews360 Rajesh

Recent Posts

பழனி – வேல் இருமொழிக் கொள்கை இதுதான்.. தொடரும் பிடிஆர் அண்ணாமலை மோதல்!

அந்த இரு மொழிகள் எவை என்பதை, அண்ணன் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொல்ல மறந்துவிட்டார் என அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை:…

11 minutes ago

என்னது நாகரிகம் இல்லையா? தமிழன் நாக்கை அறுத்துவிடுவான் : அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை!!

எங்களைப் பார்த்து நாகரிகம் அற்றவர்கள் என்று பேசுகிறீர்கள் நாக்கை அறுத்து விடுவான் டா தமிழன் என அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார்.…

26 minutes ago

இருப்பைக் காட்டிக் கொள்கிறாரா செந்தில் பாலாஜி? அண்ணாமலை குறித்து அன்றும், இன்றும் ட்விஸ்ட் பேச்சு!

லண்டனில் படிக்கச் சென்றீர்களே, அங்கு ஆங்கிலத்தில் பேசினீர்களா? அல்லது இந்தியில் பேசினீர்களா? என அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.…

1 hour ago

இந்தியாவில் முதன்முறையாக விலை உயர்ந்த காரை வாங்கிய நடிகை.. விலையை கேட்டா தலையே சுத்திடும்!

சினிமாவில் பிரபலமாகும் நடிகர்கள் பெரும்பாலும் விலை உயர்ந்த காரை பயன்படுத்துகின்றனர். இதெல்லாம் சினிமாவில் உள்ளவர்களக்கு சகஜம் தானே என்று நாம்…

1 hour ago

இனிமேல் இப்படித்தான்… ஒரே படத்தில் மூன்று நடிகைகளை கேட்டு அடம் பிடிக்கும் இளம் நடிகர்!

தற்போதெல்லாம் ஒரு படம் ஹிட் ஆனாலே, நடிகர் நடிகைகள் கொடுக்கும் பில்டப்புக்கு எல்லையே இல்லை. நடிகைகள் தயாரிப்பாளர்களிடம் கறார் காட்டுவதும்,…

2 hours ago

தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (மார்ச் 13) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 55 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 120…

2 hours ago

This website uses cookies.