நெல்லை நீதிமன்றத்திற்கு வழக்கு சம்பந்தமாக கடந்த 19ஆம் தேதி ஆஜராக வந்த பனங்காட்டு படை கட்சி தலைவர் ராக்கெட் ராஜாவின் பாதுகாப்புக்கு வந்த காவல் வாகனத்திலிருந்து இறங்கி ராக்கெட் ராஜா வாகனத்தில் ஏறிய திசையன்விளை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராமமூர்த்தியை நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
பனங்காட்டு படை கட்சியின் நிறுவன தலைவரான ராக்கெட் ராஜா இரண்டு கொலை வழக்கு மற்றும் பேருந்து எரித்த வழக்கு சம்பந்தமாக நெல்லை நீதிமன்றத்திற்கு கடந்த 19ஆம் தேதி ஆஜராக வந்திருந்தார் .
இதற்காக அவரது சொந்த ஊரான திசையன்விளை அருகே உள்ள ஆணைகுடி பகுதியில் இருந்து நீதிமன்றத்திற்கு வரும்பொழுது திசையன்விளை காவல்துறையினர் அவருக்கு நெல்லை காவல் மாவட்ட எல்கை வரையில் பாதுகாப்பு அளித்தனர் .
அந்த வாகனத்தில் திசையன்விளை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி நெல்லை நீதிமன்ற அலுவல் வேலைக்காக அதே பாதுகாப்பு வாகனத்தில் ஏறி வந்துள்ளார்..
மாநகர எல்லைக்குள் வந்தவுடன் திசையன்விளை காவல்துறையினர் தங்களது பாதுகாப்பை நெல்லை மாநகர காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து மாநகர காவல் துறையினர் ராக்கெட் ராஜாவுக்கு பாதுகாப்பு அளித்து நெல்லை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில் நீதிமன்ற அலுவலக பணிக்காக திசையன்விளையை காவல் உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி மாநகர பாதுகாப்பு காவல் வாகனத்தில் ஏறாமல் ராக்கெட் ராஜா வாகனத்தில் ஏறி நீதிமன்றம் சென்றுள்ளார் .
இதனை அடுத்து வந்த புகாரின் பேரில் நெல்லை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் கடந்த 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை ராமமூர்த்தியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.