தமிழகம்

அந்த மாதிரி ஐடியா இல்லங்க.. ஐசிசி சாம்பியன் டிராபியில் இந்தியா படைத்த மொத்த சாதனைகள்!

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

துபாய்: 9வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் எடுத்தது.

இதில் அதிகபட்சமாக டேரில் மிச்செல் 63 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து, 252 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் – ரோகித் சர்மா இணை, அதிரடியாக 100 ரன்கள் வரை பார்ட்னர்ஷிப்பைத் தொடர்ந்தன.

எனவே, முதல் விக்கெட்டுக்கு 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்த ஜோடி அசத்தியது. கில் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்த ரோகித் சர்மா 76 ரன்களில் ரச்சின் ரவீந்திரா பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் கேப்டனாக அதிக ரன்கள் அடித்த 2வது வீரர் என்ற சனத் ஜெயசூர்யாவின் வாழ்நாள் சாதனையை தகர்த்துள்ள ரோகித் சர்மா 2வது இடத்தை பிடித்துள்ளார்.

இதனையடுத்து, இந்தியாவின் அபார பந்துவீச்சில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றது. இதன் மூலம் 7வது ஐசிசி கோப்பையை இந்திய அணி வென்றது. முன்னதாக, மோசமான கேப்டன் எனக் கூறிய ஷமா முகமது, தற்போது ரோகித் சர்மாவின் கேப்டன்சிக்கு தலைவணங்குவதாக தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியுள்ளார்.

இதனிடையே, கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்ற பின்னர், டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததைப் போல, தற்போது சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பின்னர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிப்பை ரோகித் வெளியிடுவார் என்ற தகவல் பரவியது.

இதையும் படிங்க: ரோகித்தின் மோசமான உலக சாதனை.. தீயான குல்தீப் யாதவ்..

அது மட்டுமல்லாமல், அடுத்த மாதத்துடன் 38 வயது நிறைவடையும் ரோகித் சர்மா, 2027ல் நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பாரா என்ற சந்தேகத்தையும் சிலர் எழுப்பினர். ஆனால், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதில்லை எனவும், வதந்தியை பரப்பாதீர்கள் எனவும் ரோகித் சர்மா பதில் அளித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றதன் மூலம், சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற முதல் கேப்டன் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார்.

    Hariharasudhan R

    Recent Posts

    கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?

    சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…

    55 minutes ago

    ஒரே ஒரு டயலாக் பேசுனது குத்தமா? ஷூட்டிங் ஸ்பாட்டில் லெஃப்ட் ரைட் வாங்கிய கவுண்டமணி…

    கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…

    2 hours ago

    விஜய் டிவி VJ பிரியங்காவுக்கு சைலண்டாக நடந்த 2வது திருமணம்? வெளியான புகைப்படம்!

    விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…

    3 hours ago

    தர்பூசணியை தாராளமாக சாப்பிடலாம்… உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு புதிய சிக்கல்!

    தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…

    3 hours ago

    லோகேஷிடமிருந்து அந்த நடிகருக்கு பறக்கும் ஃபோன் கால், ஆனா நோ ரெஸ்பான்ஸ்? அடப்பாவமே

    லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…

    4 hours ago

    நான் தான் பா கராத்தே பாபு- ரவி மோகனுக்கு ஷாக் கொடுத்த அமைச்சர்! இதான் டிவிஸ்ட்டே

    கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…

    5 hours ago

    This website uses cookies.