ராமநாதபுரம் : பரமக்குடி நகராட்சி பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பொன்னையா புரத்தில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்கள் பெண்கள் என மொத்தம் 240 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு பள்ளியிலே வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று மதியம் உணவு இடைவேளையில், உணவு சாப்பிட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளை பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மதிய உணவில் வழங்கப்பட்ட முட்டை கெட்டுப் போயிருந்ததால் மாணவ, மாணவிகளுக்கு இவ்வாறு ஏற்பட்டு உள்ளது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவுகளை தரம் இல்லாமல் வழங்கியதால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.