தஞ்சை : கும்பகோணம் அருகே ஹோட்டல் உரிமையாளரிடம், நாற்காலி போட்டு ஒய்யாரமாக உட்கார்ந்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடியை காவல்துறையினர் கைது செய்தனர்.
கும்பகோணம் அருகே சோழபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெகபர் அலி (46). இவர் சோழபுரம் மெயின் ரோட்டில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவரது ஹோட்டலுக்கு இராமானுஜபுரத்தை சேர்ந்த கவியரசன் (22). ஹோட்டலில், வெங்காயம் நறுக்குவதற்காக வைத்திருந்த கத்தியை எடுத்துக்கொண்டு, கடை உரிமையாளர் ஜெகபர் அலியிடம் சென்றார்.
அங்கு ஜெகபர் அலியின் அருகில் நாற்காலி போட்டு ஒய்யாரமாக உட்கார்ந்து கொண்டு, பணம் தர வேண்டும், இல்லையெனில் கடையை காலி செய்து விடுவேன் என மிரட்டி 500 ரூபாயை பறித்து சென்றார்.
இதையடுத்து, ஜெகபர் அலி அளித்த புகாரின் போரில், சோழபுரம் காவல்துறையினர் கடையில் இருந்த சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமரா காட்சியை அடிப்படையாக வைத்து, கவியரசனை கைது செய்தனர். இவர் மீது பல்வேறு காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையிலும், ரவுடி பட்டியலிலும் உள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள வணிகர்கள் பலரும் அச்சமடைந்துள்ளனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.