தஞ்சை : கும்பகோணம் அருகே ஹோட்டல் உரிமையாளரிடம், நாற்காலி போட்டு ஒய்யாரமாக உட்கார்ந்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடியை காவல்துறையினர் கைது செய்தனர்.
கும்பகோணம் அருகே சோழபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெகபர் அலி (46). இவர் சோழபுரம் மெயின் ரோட்டில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவரது ஹோட்டலுக்கு இராமானுஜபுரத்தை சேர்ந்த கவியரசன் (22). ஹோட்டலில், வெங்காயம் நறுக்குவதற்காக வைத்திருந்த கத்தியை எடுத்துக்கொண்டு, கடை உரிமையாளர் ஜெகபர் அலியிடம் சென்றார்.
அங்கு ஜெகபர் அலியின் அருகில் நாற்காலி போட்டு ஒய்யாரமாக உட்கார்ந்து கொண்டு, பணம் தர வேண்டும், இல்லையெனில் கடையை காலி செய்து விடுவேன் என மிரட்டி 500 ரூபாயை பறித்து சென்றார்.
இதையடுத்து, ஜெகபர் அலி அளித்த புகாரின் போரில், சோழபுரம் காவல்துறையினர் கடையில் இருந்த சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமரா காட்சியை அடிப்படையாக வைத்து, கவியரசனை கைது செய்தனர். இவர் மீது பல்வேறு காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையிலும், ரவுடி பட்டியலிலும் உள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள வணிகர்கள் பலரும் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.