ரூ.1 கோடி மதிப்பில் பிரம்மாண்ட விமான செட்டில் நடந்த சண்டைக்காட்சி : டூப் போடாமல் நடித்து பட்டையை கிளப்பிய பிரபல நடிகர்!!

விரைவில் வெளியாக இருக்கும் ‘பிரேக்கிங் நியூஸ்’ படத்திற்காக ரூ. 1 கோடி ரூபாய் மதிப்பில் விமான செட் அமைக்கப்பட்டு சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஜெய் நடிப்பில் சமீபத்தில் ‘வீரபாண்டியபுரம்’ வெளியானது. அதனைத்தொடர்ந்து, மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் நடித்த ‘குற்றம் குற்றமே’ தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்போதே ஜெய் இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் ‘பிரேக்கிங் நியூஸ்’ படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. திருக்கடல் உதயம் தயாரித்துள்ள இப்படத்திற்கு விஷால் பீட்டர் இசையமைத்துள்ளார்.

ஜானி லால் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். ஜெய்யுடன் பானுஸ்ரீ, பானு ரெட்டி, பிக் பாஸ் சினேகன், ராகுல் தேவ், தேவ் கில், ஜெயபிரகாஷ், சந்தான பாரதி, பழ.கருப்பையா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

இந்த படத்திற்காக ரூ.1 கோடி மதிப்பில் கார்கோ விமான செட் அமைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறது படக்குழு. இதுகுறித்து இயக்குநர் பேசும்போது, ‘சரக்கு விமானத்தில் காட்சி நடைபெறுவதாக திட்டமிட்டிருந்ததால், சண்டைக்காட்சிகள் எடுக்க மிக சவாலாக இருந்தது.

ஜெய் மிக அர்ப்பணிப்புடன் அவருடைய ஆக்‌ஷன் காட்சிகளை, டூப் பயன்படுத்தாமல் நடித்தார். அதனால், காட்சிகளை மிக விரைவாக, எளிதாக படமாக்க முடிந்தது’ என்று கூறினார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…

7 hours ago

எங்க கூட்டணிக்கு வந்தால் விஜய் வெற்றி பெற முடியும்.. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் கணிப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…

7 hours ago

ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரை வந்த சிவனடியார்கள் : ஈஷாவில் ஆரவாரமான வரவேற்பு!

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…

8 hours ago

போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்க வந்த பெண் மானபங்கம்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு!!

திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…

8 hours ago

திடீரென ரஜினி கொடுத்த பரிசு.. ஆச்சரியத்தில் ஆடிப்போன இயக்குநர்..!!

இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…

8 hours ago

அடுத்தடுத்து மாயமான இளைஞர்கள் கொன்று புதைப்பு.. வெளியான பகீர் தகவல்!

கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…

9 hours ago

This website uses cookies.