திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஆலய திருப்பணி ஆய்வறிக்கை வழங்க
1 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய தொல்லியல் துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோயில் பிரசித்தி பெற்ற வைணவ தலமாகும். இதன் பரம்பரை டிரஸ்டியாக இருந்து வருபவர் பிச்சுமணி ஐயங்கார்.
கோவில் கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகளுக்கும் மேலானதால், பக்தர்கள் உதவியுடன் திருப்பணிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. திருப்பணி தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையில் முறையாக அனுமதியும் பெறப்பட்டது.
ஆயினும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட State level expert committee என்ற கமிட்டியில் ஆய்வறிக்கை பெறவேண்டியது கட்டாயம் என்பதால்
அக்கமிட்டி உறுப்பினரும் தொல்லியல் துறை வல்லுனருரான மூர்த்தீஸ்வரியை அணுகி ஆய்வறிக்கை கேட்டபோது ஆய்வறிக்கை வழங்க மூர்த்தீஸ்வரி 10 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
ஆயினும் லஞ்சம் கொடுக்க விரும்பாத பிச்சுமணி ஐயங்கார் இது குறித்து ஒழிப்பு துறை Dsp மணிகண்டனிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மூர்த்தீஸ்வரி லஞ்சப்பணம் ரூபாய் 1 லட்சத்தை வாங்கிய போது கையும் களவுமாக பிடிபட்டார். மேலும் அவர் காரில் வைத்திருந்த ரூபாய் 5 லட்சமும் பிடிபட்டது.
ஏப்ரலில் வெளியாகவுள்ள குட் பேட் அக்லி படம் மீது அஜித்குமார் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். சென்னை: மைத்ரி…
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
This website uses cookies.