திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஆலய திருப்பணி ஆய்வறிக்கை வழங்க
1 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய தொல்லியல் துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோயில் பிரசித்தி பெற்ற வைணவ தலமாகும். இதன் பரம்பரை டிரஸ்டியாக இருந்து வருபவர் பிச்சுமணி ஐயங்கார்.
கோவில் கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகளுக்கும் மேலானதால், பக்தர்கள் உதவியுடன் திருப்பணிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. திருப்பணி தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையில் முறையாக அனுமதியும் பெறப்பட்டது.
ஆயினும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட State level expert committee என்ற கமிட்டியில் ஆய்வறிக்கை பெறவேண்டியது கட்டாயம் என்பதால்
அக்கமிட்டி உறுப்பினரும் தொல்லியல் துறை வல்லுனருரான மூர்த்தீஸ்வரியை அணுகி ஆய்வறிக்கை கேட்டபோது ஆய்வறிக்கை வழங்க மூர்த்தீஸ்வரி 10 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
ஆயினும் லஞ்சம் கொடுக்க விரும்பாத பிச்சுமணி ஐயங்கார் இது குறித்து ஒழிப்பு துறை Dsp மணிகண்டனிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மூர்த்தீஸ்வரி லஞ்சப்பணம் ரூபாய் 1 லட்சத்தை வாங்கிய போது கையும் களவுமாக பிடிபட்டார். மேலும் அவர் காரில் வைத்திருந்த ரூபாய் 5 லட்சமும் பிடிபட்டது.
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…
நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடந்தது, அதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி…
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
This website uses cookies.