செங்கல்பட்டு மாவட்டம் வேதாச்சலம் நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுப்பிரியர் ஒருவர் மதுபானம் வாங்க வந்த போது, அவரிடம் கடை ஊழியர்கள் கூடுதலாக 10 ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அந்த நபர் டாஸ்மாக் கடை வாசலில் நின்றபடி அங்கிருந்தவர்களிடம் கேள்வி எழுப்பினார். அப்போது அங்கு வந்த செங்கல்பட்டு நகர காவல் உதவி ஆய்வாளர் ராஜா, அந்த நபரை அங்கிருந்து செல்லுமாறு கூறியதோடு அவரை அடித்து விரட்டிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த வீடியோவை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட எஸ்.ஐ. ராஜா மீது காவல்துறை தரப்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி ராஜாவை செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் இருந்து ஆயுதப்படைக்கு மாற்றி செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்கவும் ராஜாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.