தமிழகம்

1 லிட்டர் பால் பல ஆயிரம் ரூபாய்.. பல மடங்கு லாபம் தரும் கழுதைப் பால்.. காத்திருந்த அதிர்ச்சி!

திருநெல்வேலி மாவட்டம் நூக்கடல் கிராமத்தை சேர்ந்த பாபு உலகநாதன் என்பவர் டாங்கி பேலஸ் என்ற பெயரில் கழுதை பண்ணை ஒன்றைத் தொடங்கி உள்ளார்.

இதில் கூட்டாளிகளாக கிரி சுந்தர், சோனிக், பாலாஜி, டாக்டர் ரமேஷ் ஆகியோரை இணைத்து கொண்டு ஒரு லிட்டர் கழுதைப்பால் ₹1600 முதல் ₹1800 வரை வாங்குவதாக விளம்பரம் செய்தார்.

மேலும் யூடியூப் சேனல் வீடியோக்களில் தனக்கு அதிக அளவில் கழுதை பால் கேட்டு ஆர்டர்கள் வருகின்றன. ஆனால் தேவைக்கு ஏற்ப சப்ளை செய்ய முடியவில்லை என்று மக்களை நம்ப வைத்தார்.

மேலும் சந்தையில் கழுதைப் பாலுக்கு அதிக தேவை உள்ளது. கழுதை பால் வியாபாரம் செய்தால் சாப்ட்வேர் வேலைக்கு செல்வதை காட்டிலும் பெரும் லாபம் சம்பாதிக்கலாம் என்று யூடியூப் வீடியோ மூலம் மக்களை நம்ப வைத்துள்ளார்.

இதனை உண்மைஉண்மை என நம்பிய ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து கழுதை பால் வியாபாரம் என்பதை உண்மை என நம்பிய மக்கள் கழுதைகளை வாங்க லட்சக்கணக்கில் பணம் அனுப்பினர்.

இதையும் படியுங்க: நச்சுப் பாம்பு மதவாத சக்திகளுக்கு துணை போய்விடக்கூடாது ; விஜய்க்கு திமுக கூட்டணி எம்பி வைத்த டிமாண்ட்!

மேலும் கழுதை பால் விற்பனை லாபம் பெறுவது தொடர்பாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு என பல மாநிலங்களில் கருத்தரங்கு நடத்தி உள்ளனர். இவர்கள் பேச்சில் கவர்ந்த பலரும் இதில் இணைந்தனர்.

இதற்காக உறுப்பினர் சேர்க்கை கட்டணம் என்ற பெயரில் ஐந்து லட்சம், கால்நடை மருத்துவர் என்று காண்பித்து கழுதைகளுக்கு சிகிச்சை அளித்தது ₹ 50,000 என வசூல் செய்தனர்.

மேலும் கழுதைகளின் பால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிலுவை வைத்தால் அது பால் கெட்டுவிடும் என்பதால் நிலுவை வைக்க அதிக திறன் கொண்ட ரெஃப்ரிஜிரேட்டர் தேவை என ரூ.75,000 முதல் ஒன்றரை லட்சம் வரை பணம் வசூல் செய்தார்.

இப்படி பல்வேறு காரணங்கள் கூறி ஒவ்வொரு உறுப்பினரிடம் இருந்தும் ₹ 25 லட்சத்தில் இருந்து ₹ 1.5 கோடி வரை வசூல் செய்தனர்.

அவ்வாறு சுமார் ₹100 கோடிக்கு மேல் மோசடியில் நடந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் ஐதராபாத்தில் உள்ள காவல்நிலையத்தில் உலகநாதன் மற்றும் அவருக்கு துணையாக இருந்தவர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் செய்தனர். மோசடி செய்தவர்களை கைது செய்து தாங்கள் இழந்த பணத்தை மீட்டு தரும்படி பாதிக்கப்பட்டவர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

7 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

7 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

7 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

8 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

8 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

8 hours ago

This website uses cookies.