திண்டுக்கல் : 10 ஆண்டு காலத்தில் கூட்டுறவு சங்கத்தில் சுமார் 1000 கோடிகள் ஊழல் நடத்தப்பட்டு உள்ளது. விசாரணைக்கு பின் அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட வீரகல்லில் தமிழகத்தில் முதன் முறையாக கூட்டுறவு துறை சார்பாக கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு சேர்க்கை கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறுகையில் சென்ற ஆட்சிக்காலத்தில் மாநில அரசு ஐந்து கல்லூரிகளை கூட திறக்கப்படவில்லை ஆனால் திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு காலத்தில் 1435 ரூபாய் கல்விக் கட்டணத்தில் முப்பத்தி மூன்று கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளது.
இந்தக் கல்லூரிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் கல்வி கற்க சேர்ந்து வருகின்றனர் என்றும், சென்ற ஆட்சிக்காலத்தில் கூட்டுறவு சங்கங்களில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்று இருக்கிறது. அதற்கான விசாரணைகள் நடந்து வருகிறது. விசாரணையின் முடிவில் கூட்டுறவு சங்க ஊழல்களில் ஈடுபட்டவர்களில் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று பேட்டி அளித்தார்
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.