Categories: தமிழகம்

மக்களவை தேர்தலின் போது ரூ.11.48 கோடி பறிமுதல் செய்த விவகாரம் : திமுக எம்பி கதிர் ஆனந்திடம் இருந்து வருமான வரி வசூலிக்க தடை!!

திமுக எம்.பி கதிர் ஆனந்திடம் இருந்து வருமான வரித்துறை வரி வசூலிப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் 4 வாரங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மக்களவைக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்போது, வேலூர் தொகுதியில் தாமோதரன் என்பவரது வீட்டில் இருந்து 11 கோடியே 48 லட்சம் ரூபாயை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இந்த பணம் கதிர் ஆனந்திற்கு சொந்தமானது எனக் கூறி, அதற்கான வரியை செலுத்தவும் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.

இதனை எதிர்த்து வேலூர் தொகுதி திமுக எம்.பி கதிர் ஆனந்த் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு, உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து பதில் அளிக்க அவகாசம் வழங்க வருமான வரித்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதே நேரம் இவ்வழக்கில் தனி நீதிபதி நிர்ணயித்த காலக்கெடு முடிவடைவதால், கதிர் ஆனந்திடம் இருந்து வரி வசூலிப்பதை நான்கு வாரத்திற்கு நிறுத்தி வைக்குமாறு வருமான வரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஒரே இடத்தில் திமுக – பாஜகவினர் மாறி மாறி கோஷம்.. பரபரப்பில் சென்னை!

சென்னையில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினரும், எதிராக திமுகவினரும் ஒரே இடத்தில் கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது. சென்னை: சென்னை, கோயம்பேட்டில்…

18 seconds ago

அடடே! விரதம் இருந்த நயன்தாரா…கோலாகலமாக ஆரம்பித்த மூக்குத்தி அம்மன் 2 பட பூஜை.!

பிரம்மாண்டமாக தொடங்கிய மூக்குத்தி அம்மன் 2 நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் "மூக்குத்தி அம்மன் 2" திரைப்படத்தின் பூஜை…

1 hour ago

மும்மொழிக்கு ஆதரவு.. பயத்தில் நிலை தடுமாறும் முதலமைச்சர் : அண்ணாமலை அட்டாக்!

தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருமொழிக் கொள்கை அமலில் உள்ளது. தற்போது மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என…

2 hours ago

என்னைய மறந்துட்டாங்க…புலம்பும் விஜய் பட வில்லன்..!

இது என்னுடைய கஷ்ட காலம்.! நடிகர் நீல் நிதின் முகேஷ் ஒரு திறமையான நடிகராக இருந்தாலும்,தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை…

2 hours ago

’நான் அப்பாவக் கொன்னுட்டேன்’.. ஆட்டோ ஓட்டுநரால் வெளியான பகீர் சம்பவம்!

சென்னையில், தந்தையைக் கொலை செய்துவிட்டு தப்பிய மகன் மற்றும் தாயை ஆட்டோ ஓட்டுநர் காவல் நிலையம் அழைத்துச் சென்றது தொடர்பாக…

2 hours ago

உயிருக்கு போராடும் துள்ளுவதோ இளமை பட நடிகர்.. உதவி செய்வாரா தனுஷ்?

துள்ளுவதோ இளமை படம் மூலம் தான் நடிகர் தனுஷ் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் ஏராளமானோர் அறிமுக நடிகர்களாக இணைந்தனர்.…

3 hours ago

This website uses cookies.