திருவள்ளூர் : பெரியபாளையம் அருகே ஆன்லைன் செயலி மூலம் கடன் கேட்ட வாலிபர் 86 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கிக் கணக்கிலிருந்து பணப் பரிமாற்றம் செய்து நூதன மோசடியில் ஈடுபட்ட நபரிடம் ஏமாந்த விரக்தியில் தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் டாக்டர் அம்பேத்கர் நகரில் வசித்து வந்தவர் பிரசாந்த் (வயது 37). தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு தனலட்சுமி (வயது 28) என்ற மனைவி ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.
பிரசாந்த் தனது குடும்ப செலவுக்காக ஆன்லைன் செயலி மூலம் தனியார் நிறுவனத்தில் ரூபாய் 6 லட்சம் கடன் உதவி கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
இந்த விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்டதாக பேசிய தனியார் கல்வி நிறுவன ஊழியர் கடன் தொகையை பெற ரூபாய் 86 ஆயிரத்தை செலுத்துமாறு தெரிவித்துள்ளார்.
கடன் தொகை தனது வங்கி கணக்கில் வராததால் பிரசாந்த் திருவள்ளூரில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதுகுறித்து உறவினர் மற்றும் நண்பர்களிடம் தெரிவித்து பிரசாந்த் வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் இதுகுறித்து தகவலறிந்த பெரியபாளையம் போலீசார் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.