கடலூர் வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் எம்.புதூரில் வானவேடிக்கை பட்டாசு தயாரிக்கும் ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில், வெடிகள் வெடித்து சிதறி 3 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் வெடிவிபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவுட்ட முதலமைச்சர் ஸ்டாலின் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் பட்டாசு வெடி விபத்து சம்பவம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கடலூர் மாவட்டம் எம்.புதூர் பகுதியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது.
இறந்தவர் குடும்பத்திற்குத் பாஜக ஆழ்ந்த இரங்கல்கள். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டிக்கொள்கிறோம். இறந்தவர் குடும்பத்திற்கு தலா 50 லட்ச ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு தலா 15 லட்ச ரூபாயும் நிவாரணமாக திமுக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்பதே பாஜக-வின் கோரிக்கை. என பதிவிட்டுள்ளார்.
சென்னையில், இன்று (பிப்.26) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 25 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 50 ரூபாய்க்கு…
தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா மாமல்லபுரம் அருகே பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட…
முதல்வரே தமிழகத்தில் மூன்றாவது மொழி என்னவென்று முடிவெடுக்க முடியாது, பெற்றோர் ஆசிரியர் கழகம் தான் முடிவெடுக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார்.…
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
This website uses cookies.