பட்டா மாற்ற ரூ.5 ஆயிரம் லஞ்சம் : காட்டிக் கொடுத்த வீடியோ… சைலண்ட் மோடில் விஏஓ.. அதிர வைத்த அதிகாரிகள்!!!
காஞ்சிபுரம் மாவட்டம் பினாயூர் அருகே உள்ள அரும்புலியூர் கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் மாரியப்பன். கிராம உதவியாளராக இருப்பவர் கவியரசன். இவர்கள் பினாயூர் கிராமத்தையும் கூடுதலாக கவனித்து வருகின்றனர்.
பினாயூர் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்ற விவசாயி பட்டா , மற்றும் உட்பிரிவு மாற்ற கடந்த ஜூலை மாதம் விண்ணப்பித்துள்ளார். மேலும் கிராம நிர்வாக அலுவலரை அணுகியுள்ளார். அப்போது குமாரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத குமார் இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் கலை செல்வன் அவர்கள் வழக்கு பதிவு செய்து , வேதிப் பொருட்கள் தடவிய பணத்தை குமாரிடம் கொடுத்து லஞ்சமாக கொடுக்கும்படி கூறினர்.
கிராம உதவியாளர் கவியரசனிடம் அந்தப் பணத்தை குமார் கொடுக்கும்போது ,அரும்புலியூர் வருவாய் அலுவலர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் மறைந்திருந்து கவியரசனையும், மற்றும் அங்கிருந்த கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பனையும் கைது செய்தனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் கலைச்செல்வன் தலைமையில் ஆய்வாளர்கள் அண்ணாதுரை மற்றும் கீதா ஆகியோர் பிடிபட்ட விஏஓ மற்றும் உதவியாளரிடம் பணத்தை கைப்பற்றி தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.