நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ. 53.72 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தகவல் அளித்துள்ளது.
வரும் 19 ஆ,ம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடைபெறும் இடங்களில் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. ரூ.50 ஆயிரத்திற்க்கு அதிகமான அளவில் பணம் மற்றும் பொருட்கள் ஆவணமின்றி எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பல இடங்களில் 1,650 பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் தமிழகம் முழுவதும், ரூ.53,72,001 மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 40.40,831 லட்சம் ரூபாய் ரொக்கம், ரூ. 12. 57 லட்சம் மதிப்புள்ள 15 லேப்டாப்கள், 40 செல் போன்கள், 19 துண்டுகள் , 140 குத்து விளக்குகள் உள்ளிட்ட பொருட்கலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் ரூ. 74 ஆயிரத்து 90 மதிப்புள்ள மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.