திருப்பூர் : தடையின்மை சான்றுக்கு ரூ. 9 லட்சம் லஞ்சம் பெற்ற திருப்பூர் வணிகவரித்துறை அலுவலர் மற்றும் எழுத்தர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் குமரன் சாலையில் உள்ள வணிகவரித்துறை இரண்டாம் மண்டல அலுவலகத்தில் வணிகவரித்துறை அலுவலராக பணியாற்றி வருபவர் ஜெயகணேஷ்.
இவரிடம் திருப்பூரில் தொழில் நடத்தி வந்த கோவையை சேர்ந்த குணசேகரன் என்பவர் தொழிலை தொடர்ந்து நடத்த முடியாத சூழலில் நிறுவனத்தை மூடிவிட்டு வங்கியில் வழங்குவதற்காக ஜிஎஸ்டி வரி உள்ளிட்டவை அடங்கிய வணிகவரித் துறை அலுவலகத்தில் சி-படிவம் சமர்ப்பித்து பணம் பெற தடையின்மை சான்று கேட்டு விண்ணப்பித்துள்ளார் .
தடையின்மைச் சான்று வழங்க வணிக வரித்துறை அலுவலர் ஜெயகணேஷ் 7 லட்சமும் , எழுத்தராகப் பணிபுரிந்து வந்த ரத்னா 2 லட்சமும் லஞ்சமாக கேட்டுள்ளார் . இதையடுத்து குணசேகரன் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழங்கிய பணத்தை குணசேகரன் இன்று ஜெயகணேசிடம் , ரத்தினாவிடமும் தந்தபோது அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்சம் பெற்ற ஜெயகணேசையும் , ரத்னாவையும் கைது செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.