திருப்பூர் : தடையின்மை சான்றுக்கு ரூ. 9 லட்சம் லஞ்சம் பெற்ற திருப்பூர் வணிகவரித்துறை அலுவலர் மற்றும் எழுத்தர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் குமரன் சாலையில் உள்ள வணிகவரித்துறை இரண்டாம் மண்டல அலுவலகத்தில் வணிகவரித்துறை அலுவலராக பணியாற்றி வருபவர் ஜெயகணேஷ்.
இவரிடம் திருப்பூரில் தொழில் நடத்தி வந்த கோவையை சேர்ந்த குணசேகரன் என்பவர் தொழிலை தொடர்ந்து நடத்த முடியாத சூழலில் நிறுவனத்தை மூடிவிட்டு வங்கியில் வழங்குவதற்காக ஜிஎஸ்டி வரி உள்ளிட்டவை அடங்கிய வணிகவரித் துறை அலுவலகத்தில் சி-படிவம் சமர்ப்பித்து பணம் பெற தடையின்மை சான்று கேட்டு விண்ணப்பித்துள்ளார் .
தடையின்மைச் சான்று வழங்க வணிக வரித்துறை அலுவலர் ஜெயகணேஷ் 7 லட்சமும் , எழுத்தராகப் பணிபுரிந்து வந்த ரத்னா 2 லட்சமும் லஞ்சமாக கேட்டுள்ளார் . இதையடுத்து குணசேகரன் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழங்கிய பணத்தை குணசேகரன் இன்று ஜெயகணேசிடம் , ரத்தினாவிடமும் தந்தபோது அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்சம் பெற்ற ஜெயகணேசையும் , ரத்னாவையும் கைது செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
This website uses cookies.