சேலத்தில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய நபர்கள் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சேலம் அம்மாபேட்டை பரமக்குடி நன்னுசாமி தெருவில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சேலம் நகர மண்டல தலைவர் பொறுப்பில் இருந்து வருகிறார். இதனிடையே, கடந்த ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி இவர் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டது.
இது தொடர்பாக காதர்உசேன், சையது அலி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி- எஸ்ஐடி பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த சையத்அலி மற்றும் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்த காதர் உசேன் ஆகிய இருவர் வீட்டிலும் சிபிசிஐடி காவல்துறையினர் 4 மணி நேரத்திற்கு மேலாக அதிரடி சோதனை நடத்தினர்.
கோவை சிபிசிஐடி காவல் ஆய்வாளர்கள் செல்வமீனாட்சி, ராஜேஸ்வரி தலைமையில் பத்து பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் முக்கிய ஆவணங்கள் ஏதாவது உள்ளதா? இவர்கள் வேறு ஏதாவது செய்வதற்கு திட்டமிட்டார்களா? என்பது குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.