Categories: தமிழகம்

கூட்டத்தில் மும்முரமாக பேசிய அமைச்சர்… இன்ஸ்டாவில் மூழ்கிய வட்டார போக்குவரத்து அலுவலர் ; வைரலாகும் வீடியோ!!

திருவண்ணாமலை நகரத்தில் போக்குவரத்து முறைப்படுத்துதல் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் பேச்சை கேட்காமல் அலைப்பேசியில் சமூக வலைதளங்களில் மூழ்கிய வட்டார போக்குவரத்து அலுவலரின் வீடியோ வைரலாகி வருகிறது.

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலாகும். அண்ணாமலையார் கோவிலுக்கு அனுதினமும் வெளிமாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், மாதா மாதம் நடைபெறும் பௌர்ணமி கிரிவலம் உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது அனுதினமும் ஆயிரக்கணக்கான ஐய்யப்ப பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, திருவண்ணாமலை நகரில் வெளிமாநில பக்தர்கள் வருகையால் திருவண்ணாமலை நகர மக்கள் போக்குவரத்து நெரிசலில் பாதிக்கப்பட்டு வருவதாக பல தரப்பினர் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் துறையினர் போக்குவரத்தை முறைப்படுத்தாமல் இருப்பதாக பொதுப்பணித்துறை அமைச்சரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு பொதுமக்கள் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

இந்த புகாரின் அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், பல்வேறு கட்சி பிரமுகர்கள், தனியார் தொண்டு நிறுவன உரிமையாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட‌ நபர்கள் திருவண்ணாமலை நகரில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசல் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் தெரிவித்தனர்.

பொதுமக்களின் கருத்தை கேட்ட அமைச்சர் இது குறித்து விளக்கி பேசினார். அப்போது இந்த ஆய்வு கூட்டத்தில் திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலர் சிவக்குமார் கலந்து கொண்டார். குறிப்பாக பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் தெரிவித்த கருத்திற்கு தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் அதிகாரிகளுக்கு போக்குவரத்தை எவ்வாறு முறைபடுத்த வேண்டும் என விளக்கமளித்து பேசினார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலர் சிவக்குமார் அமைச்சர் பேசுவதை காதில் வாங்காமல் தனது தொலைபேசியில் சமூக வலைதளங்களில் மூழ்கி இருந்தார். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலராக பணியில் இருக்கும் அதிகாரி போக்குவரத்து குறித்து அமைச்சர் பேசுவதை காதில் வாங்காமல் தனது தொலைபேசியில் சமூக வலைதளங்களில் மூழ்கி இருக்கலாமா எனவும், இவர்களை போன்ற அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதால் தான் சாமானிய மக்கள் அனுதினமும் அல்லல்படும் நிலை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

மேலும் திருவண்ணாமலை நகரில் அமைச்சர் தலைமையில் போக்குவரத்து நெரிசல் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தியும் இதுவரை அரசு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் மத்தியில் பெரும் குற்றச்சாட்டு எழுந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

6 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

6 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

6 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

7 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

7 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

7 hours ago

This website uses cookies.