Categories: தமிழகம்

மரணமடைந்த ஜெயக்குமார் கடிதத்தில் ரூபி மனோகரன் பெயர்.. பின்னணியில் சதி? அபாண்டமாக பழி..!!

மரணமடைந்த ஜெயக்குமார் கடிதத்தில் ரூபி மனோகரன் பெயர்.. பின்னணியில் சதி? அபாண்டமாக பழி..!!

நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் இறப்பதற்கு முன்பாக, நெல்லை மாவட்ட எஸ்பியிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்தக் கடிதத்தில், குமரியைச் சேர்ந்த ஊராட்சிமன்ற தலைவர் அனந்தராஜா தனது நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக குறிப்பிட்டுள்ளார். அப்போது, நிலத்தை அபகரிக்கும் நோக்கில் அவர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், குத்தாலிங்கம் என்பவர் ஏற்கனவே திரும்ப கொடுத்த கடனை, மீண்டும் கேட்டு மிரட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல, நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ ரூபி மனோகரன், 3 வருடங்களாக தன்னிடம் இருந்து ரூ.70 லட்சம் வாங்கி விட்டு, எந்த வேலையையும் செய்யவில்லை என்றும், எம்பி தேர்தலில் கூட ரூபி மனோகரன் சொல்பேச்சை கேட்டு ரூ.8 லட்சம் செலவு செய்ததாகவும், அந்தப் பணத்தையும் அவர் தரவில்லை என்றும், மொத்தம் ரூ.78 லட்சத்தை கேட்டதற்கு ரூபி மனோகரன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அந்தப் புகார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: நெல்லை காங்., தலைவர் விவகாரத்தில் மட்டுமல்ல.. காவல்துறையை LEFT & RIGHT வாங்கிய ராமதாஸ்!

தேர்தலுக்காக காங்கிரஸ் நிர்வாகியும், முன்னாள் மாநில தலைவருமான கேவி தங்கபாலு ரூ.11 லட்சம் வாங்கியதாகவும், அந்தப் பணத்தை ரூபி மனோகரனிடம் வாங்கி கொள்ளுமாறு தங்கவேலு கூறியதாகவும், அதன்படி கேட்டால் அந்தப் பணத்தையும் அவர் தரவில்லை என்று கூறியுள்ளார். மேலும், CCM பள்ளி தாளாளர் ஜேசுராஜா ரூ.30 லட்சம் தராமல் ஏமாற்றி விட்டதாகவும், தன்னுடைய தார் பிளாண்டை முறைகேடாக அவர் விற்று விட்டதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக கேட்டதற்கு ஜேசுராஜாவும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணம் தொடர்பாக நாங்குநேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜெயக்குமார் எனக்கு மிக நெருங்கிய நண்பர். எங்கள் கூட்டணி வெற்றிக்காக கடுமையாக உழைத்தவர், நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் இருவரும் ஒன்றாக வேலை செய்தோம்.

அவரது இழப்பு எனக்கும், கட்சிக்கும் மிகப்பெரிய இழப்பு என்றார். பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக உங்கள் மீது புகார் உள்ளது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், அதில் உண்மை இல்லை. அவருக்கும் எனக்கும் இடையில் பணம் கொடுக்கல் வாங்கல் எதுவுமில்லை. என் மீது வேண்டுமென்றே பழி போட வேண்டும் என்று யாரோ பின் புலமாக இருந்து வேலை செய்வதாக எனக்கு தோன்றுகிறது.

உண்மை என்ன என்று காவல்துறை நிச்சயம் கண்டுபிடித்து விடுவார்கள். நாங்கள் நெருங்கிய நண்பர்கள். எங்களுக்கு எந்த கருத்து வேறுபாடுகளுமே கிடையாது. நாங்கள் அண்ணன், தம்பி போல இருந்தோம். இந்த மரணம் தொடர்பாக என் மீது உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியாகி வருகிறது. காவல்துறையின் விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு தருவேன்.

எனக்கும் ஜெயக்குமாருக்கும் வரவு செலவு நடந்தது இல்லை. நாங்கள் அண்ணன், தம்பி போல்தான் பழகினோம். கடைசி வரை நண்பர்களாக இருந்தோம். இதன் பின்புலத்தில் யாரோ செயல்படுவதாக தெரிகிறது. ஆனால் யார் என்று தெரியவில்லை. நான் நாங்குநேரி தொகுதியில் சிறப்பாக செயல்படுவது சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ரவீனாவுக்கு ரெட் கார்டு… சின்னத்திரை பக்கமே தலைகாட்டக்கூடாது : அதிரடி உத்தரவு!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல திரைப்படங்களில் நடித்து வந்தவர் ரவீனா தாஹா. தொடர்ந்து சீரியல்களில் கமிட் ஆனார். இவர் ஜீ…

9 minutes ago

சமந்தா செய்த காரியம்; சுதா கொங்கரா மனதில் ஏற்பட்ட சோகம்! அடப்பாவமே

டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலமாக வலம் வருகிறார் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி பங்காரம்”…

43 minutes ago

பிரபலத்தின் மகனுடன் திருமணம்… சில்க் ஸ்மிதா குறித்து நடன இயக்குநர் ஓபன்!

சிலிக் ஸ்மிதா என்று சொன்னால் இளைஞர்களின் நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துவிடும். பழகுவதற்கு இனிமையா நபர் என பிரபலங்கள் போற்றப்படும் சிலிக்…

49 minutes ago

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

2 days ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

2 days ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

2 days ago

This website uses cookies.