Categories: தமிழகம்

ஒப்பந்தப் பணிகளில் தலையிடும் ஆளுங்கட்சியினர்? உருட்டல், மிரட்டலால் தலைதெறிக்க ஓடும் ஒப்பந்ததாரர்கள்…!

ஒப்பந்தப் பணிகளில் தலையிடும் ஆளுங்கட்சியினர்? உருட்டல், மிரட்டலால் தலைதெறிக்க ஓடும் ஒப்பந்ததாரர்கள்!

கடந்த 2022ஆம் ஆண்டு RP Infratech என்ற நிறுவனத்தை தொடங்கியவர் பத்மநாபன் கலைவாணன். இவர் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மேற்பார்வையாளர் போல இருப்பதாகக் கூறப்படுகிறது. அறிவாலயம் பத்மாநாபன் என்று அழைக்கப்படும் இவர், ஆளுங்கட்சியை சேர்ந்த பினாமி என்று கூறப்படுகிறது.

2022ஆம் ஆண்டு முதல் இன்று வரை பல நிறுவனங்கள் இல்லாமல் போனதற்கு காரணமே இந்த பத்மநாபன் தான் என்று சொல்லப்படுகிறது.

ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனங்களிடம் மணல் மற்றும் ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை, நான் தான் சப்ளை செய்வேன் எனக் கூறி, அந்த நிறுவனங்களை சுதந்திரமாக செயல்பட முடியாமல் நெருக்கடி கொடுப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், ஒப்பந்ததாரர்கள் தோண்டும் மண்ணை விற்பனை செய்வதிலும் இவரது தலையீடு இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், கட்டுமானப் பொருட்களை ஏற்றி, இறக்குவதற்கு தேவையான லாரி உள்ளிட்ட வாகனங்களை தன்னிடம் பெற வேண்டும் என்று கூறி, அதிக கமிஷனுக்காக ஒப்பந்ததாரர்களை மிரட்டுவதாகவும் சொல்லப்படுகிறது.

ஆளுங்கட்சி என்று கூறி அனைத்து ஒப்பந்ததாரர்களையும் மிரட்டி தனது நிறுவனத்திற்கு சாதகமான பணிகளை செய்து வருவதால் சொந்தக் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

TNEB-யில் WET ASH எடுப்பதற்கான டெண்டர் மற்றும் ஏலம் கோரப்பட்டிருந்தது. இதில், அறிவாலயம் பத்மநாபனின் RP Infratech நிறுவனம் உள்பட 18 நிறுவனங்கள் கலந்து கொண்டன.

இந்த நிலையில், தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி TNEB-யில் டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்களின் பட்டியலை வாங்கி, ஒவ்வொரு ஒப்பந்ததாரரையும் தனித்தனியே தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், இதனால், யாரையும் ஒப்பந்த பணிகளை எடுக்கவிடாமல், இந்த டெண்டரை RP Infratech நிறுவனம் தன்வசப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. மேலும், ஒப்பந்ததாரர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்பட வேண்டிய சூழலில், அவர்களின் விபரம் எப்படி பத்மநாபனின் கைகளுக்கு சென்றது என்ற கேள்வியும், அதிர்ச்சியும் சக ஒப்பந்ததாரர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, அறிவாலயம் பத்மநாபனின் இந்த அட்டகாசத்தில், ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவரே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால், இந்த விவகாரம் தற்போது வெளியே தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேவேளையில், எந்த நிறுவனம் டெண்டர் எடுத்தாலும், மிரட்டி ஒப்பந்த வேலையை தனது நிறுவனத்துக்கு கொண்டு வருவதை மட்டுமே குறிக்கோளாக வைத்துள்ளதாக இந்நிறுவனம் மீது ஒப்பந்ததாரர்கள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். டாடா நிறுவனம் எடுத்த ரோடு காண்ட்ராக்டை மிரட்டல் விடுத்து தன் வசப்படுத்தி, பில் தொகையும் வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இதற்காக, சென்னையில் பிரபல ரவுடியை கூலியாளாக வைத்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. லஞ்சம் வாங்காத அதிகாரிகளை மிரட்டி பணியவைப்பதாகவும், பல வருடங்களாக ஒப்பந்த பணிகளை செய்து வரும் நிறுவனங்கள் பீதியில் உள்ளனர்.

பத்மநாபனின் மிரட்டலால் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, மாநகராட்சி, மின்சார வாரியம் என முக்கிய அரசுத் துறையே நடுங்கிப் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து ஒப்பந்ததாரர்கள் தரப்பில் கூறியதாவது, சினிமா படத்தில் வரும் ரவுடிகளை விட மோசமாக ஆளுங்கட்சியின் பினாமி பத்மநாபன், மிரட்டி பல கோடி ரூபாய் ப்ராஜெக்ட்களை வாங்குவதாகவும், செந்தில் பாலாஜி போல இவர்களும் வசமா சிக்குவார்கள் என கூறினர்.

மேலும், ஆளுங்கட்சியின் அலுவலகத்தில் இருப்பவரே இப்படி செய்தால் இதை யாரிடம் முறையிடுவது என்பதே தெரியவில்லை என்றும், எத்தனை பேரை மிரட்டி எவ்வளவு டெண்டர் வேலைகளை ஆக்கிரமித்தார்கள் என்பது தெரியவில்லை. அரசாங்கத்துறை வேலைகளில் நடக்கும் இந்த மோசடி குறித்து அமலாக்கத்துறைக்கும் விஜிலென்ஸ் காவல்துறைககு புகார் சென்றுள்ளது.

விசாரணை நடைபெற்றால் பெரிய பெரிய முறைகேடுகள் எல்லாம் வெளிச்சத்துக்கு வரும்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

5 hours ago

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

6 hours ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

7 hours ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

8 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

9 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

10 hours ago

This website uses cookies.