Categories: தமிழகம்

ஒப்பந்தப் பணிகளில் தலையிடும் ஆளுங்கட்சியினர்? உருட்டல், மிரட்டலால் தலைதெறிக்க ஓடும் ஒப்பந்ததாரர்கள்…!

ஒப்பந்தப் பணிகளில் தலையிடும் ஆளுங்கட்சியினர்? உருட்டல், மிரட்டலால் தலைதெறிக்க ஓடும் ஒப்பந்ததாரர்கள்!

கடந்த 2022ஆம் ஆண்டு RP Infratech என்ற நிறுவனத்தை தொடங்கியவர் பத்மநாபன் கலைவாணன். இவர் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மேற்பார்வையாளர் போல இருப்பதாகக் கூறப்படுகிறது. அறிவாலயம் பத்மாநாபன் என்று அழைக்கப்படும் இவர், ஆளுங்கட்சியை சேர்ந்த பினாமி என்று கூறப்படுகிறது.

2022ஆம் ஆண்டு முதல் இன்று வரை பல நிறுவனங்கள் இல்லாமல் போனதற்கு காரணமே இந்த பத்மநாபன் தான் என்று சொல்லப்படுகிறது.

ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனங்களிடம் மணல் மற்றும் ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை, நான் தான் சப்ளை செய்வேன் எனக் கூறி, அந்த நிறுவனங்களை சுதந்திரமாக செயல்பட முடியாமல் நெருக்கடி கொடுப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், ஒப்பந்ததாரர்கள் தோண்டும் மண்ணை விற்பனை செய்வதிலும் இவரது தலையீடு இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், கட்டுமானப் பொருட்களை ஏற்றி, இறக்குவதற்கு தேவையான லாரி உள்ளிட்ட வாகனங்களை தன்னிடம் பெற வேண்டும் என்று கூறி, அதிக கமிஷனுக்காக ஒப்பந்ததாரர்களை மிரட்டுவதாகவும் சொல்லப்படுகிறது.

ஆளுங்கட்சி என்று கூறி அனைத்து ஒப்பந்ததாரர்களையும் மிரட்டி தனது நிறுவனத்திற்கு சாதகமான பணிகளை செய்து வருவதால் சொந்தக் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

TNEB-யில் WET ASH எடுப்பதற்கான டெண்டர் மற்றும் ஏலம் கோரப்பட்டிருந்தது. இதில், அறிவாலயம் பத்மநாபனின் RP Infratech நிறுவனம் உள்பட 18 நிறுவனங்கள் கலந்து கொண்டன.

இந்த நிலையில், தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி TNEB-யில் டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்களின் பட்டியலை வாங்கி, ஒவ்வொரு ஒப்பந்ததாரரையும் தனித்தனியே தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், இதனால், யாரையும் ஒப்பந்த பணிகளை எடுக்கவிடாமல், இந்த டெண்டரை RP Infratech நிறுவனம் தன்வசப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. மேலும், ஒப்பந்ததாரர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்பட வேண்டிய சூழலில், அவர்களின் விபரம் எப்படி பத்மநாபனின் கைகளுக்கு சென்றது என்ற கேள்வியும், அதிர்ச்சியும் சக ஒப்பந்ததாரர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, அறிவாலயம் பத்மநாபனின் இந்த அட்டகாசத்தில், ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவரே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால், இந்த விவகாரம் தற்போது வெளியே தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேவேளையில், எந்த நிறுவனம் டெண்டர் எடுத்தாலும், மிரட்டி ஒப்பந்த வேலையை தனது நிறுவனத்துக்கு கொண்டு வருவதை மட்டுமே குறிக்கோளாக வைத்துள்ளதாக இந்நிறுவனம் மீது ஒப்பந்ததாரர்கள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். டாடா நிறுவனம் எடுத்த ரோடு காண்ட்ராக்டை மிரட்டல் விடுத்து தன் வசப்படுத்தி, பில் தொகையும் வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இதற்காக, சென்னையில் பிரபல ரவுடியை கூலியாளாக வைத்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. லஞ்சம் வாங்காத அதிகாரிகளை மிரட்டி பணியவைப்பதாகவும், பல வருடங்களாக ஒப்பந்த பணிகளை செய்து வரும் நிறுவனங்கள் பீதியில் உள்ளனர்.

பத்மநாபனின் மிரட்டலால் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, மாநகராட்சி, மின்சார வாரியம் என முக்கிய அரசுத் துறையே நடுங்கிப் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து ஒப்பந்ததாரர்கள் தரப்பில் கூறியதாவது, சினிமா படத்தில் வரும் ரவுடிகளை விட மோசமாக ஆளுங்கட்சியின் பினாமி பத்மநாபன், மிரட்டி பல கோடி ரூபாய் ப்ராஜெக்ட்களை வாங்குவதாகவும், செந்தில் பாலாஜி போல இவர்களும் வசமா சிக்குவார்கள் என கூறினர்.

மேலும், ஆளுங்கட்சியின் அலுவலகத்தில் இருப்பவரே இப்படி செய்தால் இதை யாரிடம் முறையிடுவது என்பதே தெரியவில்லை என்றும், எத்தனை பேரை மிரட்டி எவ்வளவு டெண்டர் வேலைகளை ஆக்கிரமித்தார்கள் என்பது தெரியவில்லை. அரசாங்கத்துறை வேலைகளில் நடக்கும் இந்த மோசடி குறித்து அமலாக்கத்துறைக்கும் விஜிலென்ஸ் காவல்துறைககு புகார் சென்றுள்ளது.

விசாரணை நடைபெற்றால் பெரிய பெரிய முறைகேடுகள் எல்லாம் வெளிச்சத்துக்கு வரும்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

என் வாழ்க்கை முடிந்தது…எல்லாமே போச்சு..பிரபல பாலிவுட் நடிகர் உருக்கம்.!

மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…

16 minutes ago

அட செம.!கோவையில் சர்வேதச கிரிக்கெட் மைதானம்…ரசிகர்கள் குஷி.!

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…

1 hour ago

ஜெயிலுக்கு போக ரெடியா இருங்க…ஆபாச வீடியோ லீக்..நடிகை அட்டாக்.!

வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…

2 hours ago

3 நாளில் விவாகரத்து.. 19 வயது மகன் செய்த காரியம்.. ஆடு மேய்த்தபோது திடுக்கிடும் சம்பவம்!

விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…

2 hours ago

தீராத நோய்…வெளியே சொல்ல பயம்..பிரபல நடிகை வருத்தம்.!

காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…

3 hours ago

தண்ணீர் யாருக்கு காட்ட வேண்டும்? விஜய்க்கு அண்ணாமலை பதிலடி!

காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…

3 hours ago

This website uses cookies.