Categories: தமிழகம்

திட்டம்போட்டு பரப்பிய நிதியமைச்சரின் வதந்தி அம்பலம்.. பாஜகவினர் வதந்தி பரப்பும் வாட்ஸ்அப் யுனிவர்சிட்டி : முதலமைச்சர் காட்டம்!

திட்டம்போட்டு பரப்பிய நிதியமைச்சரின் வதந்தி அம்பலம்.. பாஜகவினர் வதந்தி பரப்பும் வாட்ஸ்அப் யுனிவர்சிட்டி : முதலமைச்சர் காட்டம்!

சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றதற்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் “சேலத்தில் நடைபெற்ற இளைஞர் பட்டாளத்தின் எழுச்சி மாநாடு வெற்றி பெற்றது. சமூக நீதிக்கொள்கை வழியில் பயணிக்கும் மத நல்லிணைக்க மண்தான் தமிழ்நாடு என்பதை சேலம் மாநாடு உணர்த்தியுள்ளது. காமாலைக் கண்களுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பார்கள், இந்த நிலைதான் ஆளுநர் ஆர்.என் ரவி இருக்கிறார். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை கொஞ்சமும் அறியாமல் ஆளுநர் பொறுப்பில் இருந்து செயல்படுகிறார்.

தமிழ்நாட்டின் உண்மையான பக்தர்கள் பெருமானையும் வழிபடுவர், பெரியாரின் தத்துவங்களையும் போற்றுவார்கள், தமிழ்நாட்டில் உண்மையான பக்தர்கள் பிற மதத்தினரையும் மதித்து நடப்பார்கள். பாஜகவில் உயர்ந்த பதவியில் உள்ளவர்கள் வதந்தி பரப்பும் வாட்ஸ் ஆப் யூனிவர்சிட்டிகளாக உள்ளனர்.

வதந்தியை பரப்பி அதை உண்மை போல் ஆக்கும் தனியே பாஜகவில் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களே செய்கின்றனர் பாஜகவின் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்கள் அரசியல் சட்டத்தை மதிக்காத போக்குடன் செயல்படுகின்றனர் மேற்கு மாம்பலத்தில் உள்ள கோத்தாண்டராமர் தொடர்பான ஆளுநரின் கருத்து அவரது வன்மத்தை வெளிப்படுத்துகிறது. ஒரு வதந்தியை வாட்ஸ் ஆப் வலைதளத்தில் பரவ செய்து அதை உண்மை போல ஆகும் பணியை பாஜக செய்து வருகிறது. எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று, அர்ச்சகர்களே தெரிவித்துள்ள நிலையில் ஆளுநர் அலறுவதற்கு காரணம் அரசியலே

அயோத்தி அரசியலை, கோதண்ட ராமர் கோயிலில் ஆளுநர் தேடியிருக்கிறார் என்றால் அவரிடம் இருப்பது பக்தியா, பகல் வேடமா என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். பாஜகவில் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களே பொறுப்பின்றி வதந்தியை பரப்புவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. வதந்தியை பரவச் செய்வதில் தலைநகரில் டெல்லி முதல் தமிழ்நாடு பாஜகவினர் வரை யாரும் விதிவிலக்கு அல்ல, திமுக இளைஞரணி மாநாட்டை வெற்றியை கண்டு அலரும் அரசியல் எதிரிகள் வதந்திகளை பரப்பிய திசை திருப்ப நினைக்கின்றனர்.

வதந்திகளை பரப்பி எதிரிகள் திசை திருப்ப நினைத்தாலும் திமுகவினர் இலக்கை மட்டுமே குறி வைத்து செயல்பட வேண்டும். மாநாட்டில் திரண்ட பெரும் இளைஞர்கள் பட்டாளம், திமுகவின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை விதைத்துள்ளது. சிறுபான்மையினர் மட்டுமின்றி இந்து மதத்தில் உள்ள ஓபிசி, எஸ்சி, எஸ்டி மக்களுக்கும் பாஜக அரசு துரோகம் இழைக்கிறது. மத்திய நிதியமைச்சர் திட்டமிடப்பட்ட வதந்தி பொழுது விடிவதற்குள் பொய் என அம்பலமானது. பொய் பரப்பரைக்கு உயர்நீதிமன்றமே கண்டனம் தெரிவித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மனைவிக்கு அறிமுகமான நபர்.. கணவரும் சேர்ந்து செய்த செயல்.. சென்னையில் பரபரப்பு சம்பவம்!

சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…

3 hours ago

தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?

படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…

3 hours ago

2 மாதங்களாக கோவை சிறையில் விலகாத மர்மம்.. போலீசார் முக்கிய நகர்வின் பின்னணி!

கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…

4 hours ago

தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…

4 hours ago

Uff… அந்த இடுப்பு இருக்கே : படுகிளாமரில் கீர்த்தி சுரேஷ்!

Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…

5 hours ago

புதிய தமிழக பாஜக தலைவர்.. மூத்த பிரமுகர் கொடுத்த Hint.. பரபரக்கும் தலைமை!

ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…

5 hours ago

This website uses cookies.