சூதாட்ட விடுதி நடத்தி லட்சம் லட்சமாக வருமானம்.. கசிந்த ரகசியம் : திமுக கவுன்சிலர், மனைவி உட்பட 3 பேர் கைது!
கோவை மாநகராட்சி 30 வது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பவர் சரண்யா இவரது கணவர் செந்தில்குமார் அவரது தம்பி ரவிக்குமார் ஆகியோர் கணபதி ராஜவீதி,பஜனை கோவில் தெருவில் சூதாட்ட விடுதி ஒன்றை நடத்தி வந்துள்ளனர்.
ரகசிய தகவலின் பேரில் சரவணம்பட்டி போலீசார் திடீர் சோதனையை மேற்கொண்டனர்.அப்போது அங்கு 25 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
தொடர்ந்து அங்கிருந்து சுமார் 12லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 25 நபர்களை போலீசார் கைது செய்தனர்.20 பேர் காவல்நிலைய பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் 5 பேர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சூதாட்டத்திற்கு தமிழக அரசு ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட நிலையில் மாநகராட்சி கவுன்சிலரின் கணவரே சூதாட்ட விடுதியை நடத்தியதும் அங்கு போலீசார் லட்சக்கணக்கில் பணத்தை பறிமுதல் செய்துள்ளதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.