திண்டுக்கல் ; சபரிமலை சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த ஐயப்ப பக்தர்களின் வேன் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே விருதலைபட்டி தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திர மாநிலம் சத்யசாய் ஜில்லா கதிர் மண்டலம் என்ற பகுதியைச் சேர்ந்த 22 ஐயப்ப பக்தர்கள் கடந்த 31 11.2022 ஆம் தேதி சபரிமலை யாத்திரை சென்று சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, விடுதலை பட்டி என்ற பகுதியில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து எதிர்புறம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், பக்தர்கள் வந்த வேன் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் சிராமுலு நாயக் 42 என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், ஐந்து பேருக்கு படுகாயம் அடைந்த நிலையில், வேடசந்தூர் மற்றும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து கூம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.