கார்த்திகை முதல் நாளையொட்டி ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்.
கரூர் காந்திகிராமம் இந்திரா நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலயத்தில் பத்தாம் ஆண்டு கார்த்திகை உற்சவ நிகழ்ச்சி, கொடியேற்றத்துடன் வெகு விமர்சியாக தொடங்கியது.
அதிகாலையில் ஸ்ரீ தர்மசாஸ்திராவிற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உற்சவமூர்த்தி த்வஜஸ்தம்பம் எழுந்தருளில் தொடங்கி பின்னர் கோ பூஜை நடைபெற்றது. கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்.
ஆண்டுதோறும் கார்த்திகை முதல் நாள் இன்று சபரிமலைக்கு செல்லக்கூடிய பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்குவர். அதன்படி கோவிலின் சன்னதிக்கு முன்பு சரண கோஷம் போட்டு குருசாமி தலைமையில் மாலையை போட்டுக் கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர்கள் ஒரு மண்டலம் விரதம் இருந்து சபரிமலைக்கு செல்ல உள்ளனர்கள்.
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
படப்பிடிப்பில் முன்னணி நடிகர் ஒருவர் போதையில் தன்னிடம் அத்துமீறியதாக பிரபல நடிகை பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். இதையும் படியுங்க: சண்ட போட்டு…
தமிழகத்தில் சில கல்வி நிறுவனங்கள் சாதி பெயர்களில் செயல்பட்டு வருகிறது. அந்த கல்வி நிறுவனம் பயன்படுத்தும், வாகனம், கல்வி வளாகத்தில்…
ஜூனியர் நடிகர்களின் வேதனை ஒரு திரைப்படம் என்று எடுத்துக்கொண்டால் அதில் பல ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் இருப்பார்கள். அவர்கள் இடம்பெறும் காட்சிகள்…
கோவை பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பாராமெடிக்கல் சயின்ஸ்…
சேலம் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதையும் படியுங்க: ஆட்சியில்…
This website uses cookies.