இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது,அதில் இந்தியா ஆடும் ஆட்டங்கள் மட்டும் துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் நாக் அவுட் ஆட்டங்கள் விறு விறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில் நேற்று பிப்ரவரி 21 ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.இந்த ஆட்டத்தில் தோற்கும் அணி நேரடியாக தொடரை விட்டு வெளியேறிவிடும் என்பதால் ஆட்டம் ஆரம்பித்த முதலே பரபரப்பாக சென்றது.
இதையும் படியுங்க: பேயுடன் மல்லுக்கட்டும் ஜி.வி.பிரகாஷ்…கொல நடுங்க வைக்கும் ‘கிங்ஸ்டன்’ பட டிரைலர்.!
அதன் படி முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி அதிரடியாக ஆடி 325 ரன்களை குவித்தது,அந்த அணியில் இப்ராஹிம் தன்னுடைய அசத்தலான பேட்டிங்கால் சதத்தை பதிவு செய்ததோடு மட்டுமில்லாமல் பல சாதனைகளையும் பதிவு செய்தார்,அதன் பிறகு ஆடிய இங்கிலாந்து அணி 317 ரன்களை குவித்து வெற்றிக்கு அருகே வந்து தோல்வியை தழுவியது.
இதன் மூலம் ஆப்கானிஸ்தான் திரில்லிங் வெற்றி பெற்றதோடு தொடரை விட்டு வெளியேறாமல் உள்ளது.ஆஃப்கானிஸ்தானின் இந்த வெற்றியை பலரும் பாராட்டி வரும் நிலையில்,இந்திய முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய X தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் நிலையான எழுச்சி ஊக்கமளிப்பதாக உள்ளது,அவர்கள் வெற்றி பெறுவதை ஆச்சரியமாக யாரும் பார்க்க வேண்டாம்,இப்போது வெற்றி பெறுவது அவர்களுக்கு பழக்கமாகிவிட்ட்டது என்று தெரிவித்துள்ளார்,மேலும் இப்ராஹிம் மற்றும் ஓமர் சாய் அற்புதமாக செயல்பட்டார்கள் என்று கூறியுள்ளார்,சச்சினின் இந்த பதிவு ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு மேலும் ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.