Categories: தமிழகம்

லீவு எடுத்தால் ஊக்கத் தொகையில் சம்பளம் பிடிப்பு : மாத ஊதியம் வழங்கக் கோரி பழனியில் மொட்டையடிக்கும் தொழிலாளர்கள் போராட்டம்!!

திண்டுக்கல் : பழனியில் கோவில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் கோவில் நிர்வாகத்திற்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் முடிகாணிக்கை செலுத்த வரும் பக்தர்கள் சண்முகநதி, சரவணப்பொய்கை , ஒருங்கிணைந்த முடி மண்டபம், மின் இழுவை ரயில் எதிரே உள்ள முடி மண்டபம் உள்ளிட்ட இடங்களில் 330 பணியாளர்கள் மொட்டை அடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் 330 தொழிலாளர்கள் சுமார் 60 ஆண்டுகளாக தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகின்றனர். இவர்களை நிரந்தரப் பணியாளர்கள் மாற்றி மாத ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் மொட்டையடிக்கும் தொழிலாளர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை தருவதாக அறிவித்தது. ஆனால் ஊக்கத்தொகை என்பதே மாதத்தில் ஒரு முறை வழங்கப்படும். இந்த 5 ஆயிரம் ரூபாய் ஊதியத்தை அறநிலையத்துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்தால் அந்த ஊழியரிடம் ஊக்கத் தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருவதால் ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

பக்தர்களிடம் பணம் தரக்கூடாது என்று கூறியும் மக்களிடம் பணம் பெறுபவர்கள் மீது தற்காலிக பணி நீக்கம் என்பது செய்யப்பட்டு 60 நாட்களுக்கு அவர்களுக்கு பணி இல்லை என்று கூறப்படுகிறது.

60 நாட்களுக்குப் பிறகு ஏழு நாட்கள் அன்னதான கூடத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் செய்து நன்னடத்தைச் சான்றிதழ் அங்கிருக்கும் சூப்பிரண்டிடம் வாங்கினால் மட்டுமே பணியில் சேர முடியும் என்ற இணை ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், பணி நீக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்த்திட, வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனைத் தொடர்ந்து கோவில் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

15 hours ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

15 hours ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

16 hours ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

16 hours ago

தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

17 hours ago

என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…

17 hours ago

This website uses cookies.