கோவை : போத்தனூரில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த இளைஞர்கள் கைது – 2,500 மாத்திரைகள் பறிமுதல்…!
கோவை போத்தனூர் சுற்றுவட்டார பகுதியில் குறிப்பாக செட்டிபாளையம் சாலை ரயில்வே பாலம் அருகே போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து உதவி ஆய்வாளர் தாமரைக்கண்ணன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மூன்று பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
இதையடுத்த அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடம் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.
முதல் கட்ட விசாரணையில் பிடிபட்டவர்கள் போத்தனூரை சேர்ந்த முகமது யூசுப், வெள்ளலூர் சேர்ந்த அப்துல் ரஹீம், போத்தனூர் சேர்ந்த சையது அபுதாஹிர் என்பதும், அவர்கள் அப்பகுதியில் வழக்கமாக கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த சுமார் 2,500 மாத்திரைகள் ஒரு கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மூன்று பேரையும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.