கோவை : போத்தனூரில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த இளைஞர்கள் கைது – 2,500 மாத்திரைகள் பறிமுதல்…!
கோவை போத்தனூர் சுற்றுவட்டார பகுதியில் குறிப்பாக செட்டிபாளையம் சாலை ரயில்வே பாலம் அருகே போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து உதவி ஆய்வாளர் தாமரைக்கண்ணன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மூன்று பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
இதையடுத்த அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடம் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.
முதல் கட்ட விசாரணையில் பிடிபட்டவர்கள் போத்தனூரை சேர்ந்த முகமது யூசுப், வெள்ளலூர் சேர்ந்த அப்துல் ரஹீம், போத்தனூர் சேர்ந்த சையது அபுதாஹிர் என்பதும், அவர்கள் அப்பகுதியில் வழக்கமாக கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த சுமார் 2,500 மாத்திரைகள் ஒரு கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மூன்று பேரையும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.