திண்டுக்கல் : வேடசந்தூர் அருகே பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடந்த ஆட்டுச் சந்தையில் 2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூரில் வாரம்தோறும் வியாழக்கிழமையன்று ஆடு மற்றும் கோழி சந்தை நடைபெறும். திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற சந்தையாக அய்யலூர் ஆட்டுச்சந்தை திகழ்கிறது.
இதனால் திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் ஆடு மற்றும் கோழிகளை மொத்தமாக விலைக்கு வாங்க அதிக அளவில் அய்யலூர் சந்தைக்கு வருகின்றனர்.
வரும் ஞாயிற்றுக்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இஸ்லாமியர்கள் பக்ரீத் நாளில் குர்பானி கொடுப்பதற்காக அதிக அளவில் ஆடுகளை வாங்குவது வழக்கம். இதையொட்டி இன்று அய்யலூரில் கூடிய ஆட்டுச் சந்தை களை கட்டியது.
அதிகாலை முதலே ஏராளமான வியாபாரிகளும், விவசாயிகளும் சந்தையில் குவிந்தனர். இதனால் சந்தையில் கூட்டம் அலை மோதியது. வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளையும் சேவல்களையும் வாங்கி வண்டிகளில் ஏற்றிச் சென்றனர். வெள்ளாடுகளை காட்டிலும் செம்மறி ஆடுகள் அதிக அளவில் விற்பனை ஆனது.
நேற்று ஒரு கிலோ நாட்டுக்கோழி ரூபாய் 300 முதல் 350 வரையிலும், சண்டைக்கு பயன்படும் கட்டு சேவல்கள் 2 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலும், நல்ல திடகாத்திரமான கிடா ஆடுகள் 20 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. 10 கிலோ எடையுள்ள வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் ரூபாய் 6000 முதல் 7000 வரையிலும் விற்பனை செய்யப்பட்டன.
இது குறித்து வியாபாரிகள் கூறியபோது இன்று ஆட்டுச் சந்தையில் விற்பனை நல்ல முறையில் இருந்தது. சுமார் 2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடந்துள்ளதாக தெரிவித்தனர்.
ஆடுகள் விற்பனைக்கு வந்த விவசாயிகள் கூறியபோது பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற சந்தையில் தங்கள் கால்நடைகளுக்கு நல்ல விலை கிடைத்ததாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.