சேலம் : தங்களுக்கு சொந்தமான 30 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்த திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட தாய் மகன் ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் வீராணம் மெயின் ரோடு டிஎம்எஸ் செட் பகுதியை சேர்ந்த மோகனா மற்றும் அவரது மகன் கோவிந்தராஜ் ஆகிய இருவரும் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்தனர். அப்போது, மறைத்து வைத்திருந்த டீசலை எடுத்து இருவரும் தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதான பேச்சு நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து இது குறித்து கோவிந்தராஜ் கூறும் போது :- எங்களுக்கு சொந்தமான 30 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை எனது மாமாவும், திமுக பிரமுகருமான கோவிந்தராஜ் என்பவர் அபகரித்துக் கொண்டு தர மறுக்கிறார். மேலும், நிலத்தை கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.
இது குறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்தும், எந்தெந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவேதான் வாழ வழியில்லாமல் இருக்கும் நாங்கள் இறப்பதுதான் மேல் என நினைத்து தீக்குளிக்க முயற்சி செய்தோம். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து எங்கள் நிலத்தை உடனடியாக நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தர வேண்டும், என தெரிவித்தார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.