சேலத்தில் நின்றபடி ஓட்டும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடித்து அசத்தி உள்ளார்..
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே எழுமாத்தனூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி வனிதா. இவர்களது மகன் யோகபிரதீப் காக்காபாளையம் பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. மெக்கானிக்கல் இறுதியாண்டு படித்து வருகிறார்.
இவர், தனது முயற்சியால் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை புதுமையாக தயாரித்துள்ளார்.
சார்ஜர், பேட்டரியுடன் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்ட அந்த ஸ்கூட்டரை 2 மணி நேரம் சார்ஜ் செய்தால் 55 முதல் 60 கிலோ மீட்டர் தூரம் ஓட்டி செல்லலாம் என்றும், மற்ற ஸ்கூட்டர் மாதிரி இல்லாமல் நின்ற படியும், அமர்ந்து கொண்டும் ஓட்டி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக ரூ.30 ஆயிரம் செலவு ஆகியுள்ளதாகவும் யோகபிரதீப் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது, எனது சொந்த தயாரிப்பில் கண்டுபிடித்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில்தான் தினமும் கல்லூரிக்கு சென்று வருகிறேன். கல்லூரி படிப்பை முடித்தவுடன் வர்த்தக ரீதியாக தயாரித்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளேன். அதற்கு அரசு உதவி புரிய முன்வர வேண்டும், என்றார்.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.