சேலம் பணிமனையில் பணிபுரியும் அரசு பேருந்து நடத்தினர் போலி டிக்கெட்டுக்களுடன் வடலூரில் பரிசோதனை செய்யும் அதிகாரிகளிடம் கையும் காலமாக சிக்கினார்.
சேலத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த குளிரூட்டப்பட்ட அரசு பேருந்தில் வடலூர் பகுதியில் வந்த போது, டிக்கெட் பரிசோதனை செய்யும் அதிகாரிகள் திடீரென ஏறி பயணிகளிடம் டிக்கெட்டை வாங்கி பரிசோதனை செய்தனர். அப்போது, பயணிகள் வைத்திருக்கும் டிக்கெட் போலியானதாக தெரிகிறது. அடுத்தடுத்து, பயணிகளும் அதுபோன்று டிக்கெட்டை காண்பித்ததால் குழப்பம் அடைந்த டிக்கெட் பரிசோதனை அதிகாரிகள், நடத்துனரிடம் கேட்டபோது விழி பிதுங்கி நின்றார்.
அப்போது, அவர் பையை பிடுங்கி பார்த்தபோது போலி டிக்கெட் இருப்பது தெரியவந்தது. மேலும், அவர் பேண்ட் பாக்கெட்டிலும் போலி டிக்கெட்டுகள் அதிகமாக வைத்திருந்ததை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், விரைவு பேருந்தை அனைத்து பேருந்து நிறுத்தத்திலும் நிறுத்தி பயணிகளை ஏற்றி போலி டிக்கெட் கொடுத்து தில்லாலங்கடி வேலையில் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் உடைந்தையுடன் செய்து வந்தது அம்பலமானது.
மேலும், டிக்கெட் பரிசோதனை அதிகாரிகள் கேட்டபோது நடத்துனர் அமைதி காத்ததால், சற்று எரிச்சல் அடைந்து அவரிடம் உள்ள பேண்ட் பாக்கெட்டுகளில் இருந்த போலி டிக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும், பயணிகளுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாமல் இருக்க பேருந்தை எங்கும் நிறுத்தாமல், வடலூரில் இருந்து சிதம்பரம் நேரடியாக கொண்டு வந்து பயணிகளை இறக்கி விட்டு விட்டு மீண்டும் அந்த பேருந்தை சேலம் பணிமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதேபோன்று, நடத்துனர் மற்றும் ஓட்டுநரையும் சேலம் பணிமனை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அரசு பேருந்தில் அரசு கொடுக்கும் டிக்கெட்டை வழங்காமல் போலி டிக்கெட் கொடுத்து நூதன முறையில் கொள்ளை நடத்திய நடத்துனர் மற்றும் ஓட்டுநர் சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.