சேலம் அருகே திருமணமாகி 3 மாதத்தில் கிணற்றில் குதித்து மனைவியும், கணவனும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் – வாழப்பாடி அருகே உள்ள மாரியம்மன் புதூர் பிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவரது மகன் அருள்முருகன் (27) கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவருக்கும், பெரியார் சமத்துவபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் அபிராமி (19) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
மகிழ்வோடு தொடங்கிய இவர்களின் இல்லற வாழ்க்கையில், நேற்று அசம்பாவிதம் நடந்தது. புத்தாண்டு தினமாக நேற்று இரவு கணவன், மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து போன அபிராமி நள்ளிரவு 12 மணியளவில் அருகே உள்ள விவசாய கிணற்றில் தற்கொலை செய்வதற்காக குதித்துள்ளார்.
இதைக் கண்டு பதறிப் போன கணவர் அருள் முருகன், தனது மனைவியை காப்பாற்றுவதற்காக, அவரும் கிணற்றில் குதித்துள்ளார். இதில் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர்.
இந்த சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில், சம்பவ இடத்தற்கு சென்ற போலீசார், தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் இருவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.