மின்சாரம் பாய்ந்து பலியான காவலரின் உடல், அவரது சொந்த ஊர் கொண்டு வரப்பட்டு, 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம் சங்ககிரி, தேவூர் அருகே சுண்ணாம்புக்கரட்டூரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 54. கடந்த, 1992ல் மத்திய பாதுகாப்பு படை போலீசில் சேர்ந்தார்.
சமீபத்தில் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் நக்சலைட் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது மின் வேலியில் இருந்து மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். அவரது உடல் விமானம் மூலம் ஐதராபாத், அங்கிருந்து கோவை கொண்டு வரப்பட்டது.
பின் அங்கிருந்து கோவை, வெள்ளலுார் மத்திய ஆயுதப்படை போலீஸ் டி.எஸ்.பி., கேசவன் உள்ளிட்ட போலீசார், தேவூர் அருகே சுண்ணாம்புக் கரட்டூரில் உள்ள வீட்டுக்கு வாகனம் மூலம் உடலை கொண்டு வந்தனர். அவரது உடல் மீது தேசியக்கொடி போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழக அரசு சார்பில் சங்ககிரி தாசில்தார் வாசுகி, சங்ககிரி கோட்ட கலால் தாசில்தார் வள்ளமுனியப்பன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் குடும்பத்தினர், உறவினர்கள், ஊர்மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, மத்திய ஆயுதப்படை போலீசார், 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர். பின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இறந்த திருநாவுக்கரசுக்கு அனிதா என்றை மனைவியும், மகள்கள் நவீனா,22,சுனிதா, 19,உள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
This website uses cookies.