தமிழகம்

4வது கணவரைத் தேடிய பிரியா.. வசமாக சிக்கிய விவசாயி.. லட்சக்கணக்கில் மோசடி!

சேலத்தைச் சேர்ந்த பெண் மேட்ரிமோனியல் தளம் மூலம் கோவை விவசாயியிடம் இருந்து ரூ.7.12 லட்சம் மோசடியில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த 32 வயதான விவசாயி ஒருவர், திருமணத்துக்காக வரன்களைத் தேடி வந்துள்லார். அந்த வகையில், மேட்ரிமோனியல் செயலி ஒன்றிலும் தனது அனைத்து விவரங்களையும் திருமணத்துக்காக அவர் பதிவு செய்து உள்ளார்.

இந்த நிலையில், நாமக்கல்லைச் சேர்ந்த பிரியா என்ற பெண், கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மேட்ரிமோனியல் செயலி மூலம் அந்த விவசாயிக்கு அறிமுகமாகி உள்ளார். பின்னர், இருவரும் செல்போனில் பேசி தங்களுடைய குடும்பம் பற்றி விசாரித்துள்ளனர்.

பின்னர், இருவருக்கும் சம்மதம் ஆன நிலையில், அது திருமணப் பேச்சு வரை சென்று உள்ளது. இந்த நிலையில், ஒருமுறை பிரியா செல்போனில் பேசும்போது, தனது அக்காவுக்கு உடல் நலம் சரியில்லை என்றும், அவருடைய மருத்துவச் செலவுக்கு பணம் வேண்டும் என்றும் கெஞ்சிக் கேட்டு உள்ளார்.

இதனையடுத்து, தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் தானே கேட்கிறார், அவருக்கு கொடுக்கலாம் என்று நினைத்து விவசாயி, பிரியா கேட்கும் போதெல்லாம் பணத்தை வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றம் செய்து வந்துள்ளார். இவ்வாறு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி வரை சுமார் 7 லட்சத்து 12 ஆயிரம் ரூபாயை பிரியாவுக்கு அவர் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: சிம்பு உடன் நடிக்க முடியாம போச்சு.. ரொம்ப Depression ஆகிட்டேன் : பிரபல நடிகை வருத்தம்!

ஆனால், திருமணப் பேச்சை எடுக்கும் போதெல்லாம், பிரியா அதனை தட்டிக் கழித்து வந்து உள்ளார். இதனையடுத்து, விவசாயி உடன் பேசுவதை பிரியா நிறுத்தியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த விவசாயி, கோவையில் இருந்து பிரியா அளித்த நாமக்கல் முகவரிக்குச் சென்று பார்த்து உள்ளார்.

அப்போது, அப்படி ஒரு குடும்பமே அந்த முகவரியில் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனால் தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்த விவசாயி, உடனடியாக இது குறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து உள்ளார். இதனையடுத்து, இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சேர்ந்தவர் பிரியா என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, சேலத்துக்கு விரைந்த போலீசார், பிரியாவைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் பிரயாவுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமானது தெரிய வந்தது.

அதிலும், பிரியாவின் முதல் கணவர் இறந்துவிட்ட நிலையில், இரண்டாம் கணவரிடமும் இருந்து பிரிந்த பிரியா, தற்போது சுதாகர் என்பவருடன் வாழ்ந்து வருவதும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், மேட்ரிமோனியில் தனது விவரங்களைப் பதிவு செய்து, அதில் விருப்பம் தெரிவிக்கும் நபர்களை குறிவைத்து மோசடி செய்து வந்ததாக பிரியா வாக்குமூலம் அளித்து உள்ளார்.

இதனையடுத்து, பிரியாவைக் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், பொள்ளாச்சியைச் சேர்ந்த விவசாயி மட்டுமல்லாது, வேறு யாரேனும் பிரியாவின் மேட்ரிமோனியல் வலையில் சிக்கி உள்ளனரா, எவ்வளவு பணம் மோசடியில் ஈடுபட்டு உள்ளார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

Hariharasudhan R

Recent Posts

இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?

நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…

2 hours ago

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

3 hours ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

4 hours ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

5 hours ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

5 hours ago

அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!

தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…

6 hours ago

This website uses cookies.