சேலம் அருகே இளம்பெண்ணை கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாநகர் லீபஜார் பகுதியில் மைதிலி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு செல்ல தனது இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் திடீரென அந்த பெண்ணின் இடுப்பில் கத்தியால் குத்தியுள்ளார். இதில் அதிர்ஷ்டவசமாக தப்பிய அந்த பெண், வண்டியை அப்படியே போட்டுவிட்டு மீண்டும் கடைக்குள் செல்ல முற்பட்டுள்ளார்.
இதனையடுத்து, தங்கராஜ் மீண்டும் அந்த பெண்ணை தாக்க முற்பட்டுள்ளார். அந்த பெண் கடை முன்னே வைக்கப்பட்டிருந்த பொருட்களை தூக்கி அந்த நபர் மீது வீசி உள்ளார். பின்னர், தங்கராஜ் அங்கிருந்து தப்பி ஓடவே பள்ளப்பட்டி போலீசார் நேற்று இரவு அவரை பிடித்து விசாரணைக்காக காவல் நிலையம் அனைத்து சென்று விசாரனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த மைதிலி தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் சுற்றுலா மாளிகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார், அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட…
வெற்றி இயக்குனர் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கோலிவுட்டில் சுந்தர் சி வெற்றி இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கிய…
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல திரைப்படங்களில் நடித்து வந்தவர் ரவீனா தாஹா. தொடர்ந்து சீரியல்களில் கமிட் ஆனார். இவர் ஜீ…
டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலமாக வலம் வருகிறார் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி பங்காரம்”…
சிலிக் ஸ்மிதா என்று சொன்னால் இளைஞர்களின் நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துவிடும். பழகுவதற்கு இனிமையா நபர் என பிரபலங்கள் போற்றப்படும் சிலிக்…
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
This website uses cookies.