கோவை : கோவையில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சலூன் கடைக்காரரை அவரது நண்பர்களே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை செல்வபுரத்தை அடுத்த தெலுங்குபாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 35). அதே பகுதியில் சலூன் கடை வைத்து நடத்தி வந்தார். பைனான்ஸ் தொழிலும் பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 1 மணியளவில் சசிக்குமாரின் வீட்டிற்கு வந்த இரண்டு நபர்கள் அவரை வெளியே வரசொல்லி அழைத்துள்ளனர். அப்போது வெளியே வந்த சசிக்குமாரை, இருவரும் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
சசிக்குமாரின் அலறல் சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தனர். ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த செல்வபுரம் காவல்துறையினர் சசிகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை தொடர்பாக செல்வ புரத்தைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் ராம்ஜி மற்றும் இளங்கோவன் ஆகிய இருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
முதல் கட்ட விசாரணையில் சசிக்குமாரின் கடையில் ராம்ஜி மற்றும் இளங்கோவன் இருவரும் வாடிக்கையாக வந்து சென்றுகொண்டிருந்தனர். இந்த நிலையிலே சசிகுமாரிடம் ராம்ஜி ரூ.5லட்சம் வட்டிக்கு பணம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
பணத்தைத் திருப்பி கேட்ட சசிகுமாருக்கும் ராம்ஜிக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறு காரணமாக சசிக்குமார் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.