Categories: தமிழகம்

கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட சலூன் கடைக்காரர் வெட்டிப் படுகொலை : இந்து முன்னணி பிரமுகர் உட்பட இருவர் கைது!!

கோவை : கோவையில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சலூன் கடைக்காரரை அவரது நண்பர்களே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை செல்வபுரத்தை அடுத்த தெலுங்குபாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 35). அதே பகுதியில் சலூன் கடை வைத்து நடத்தி வந்தார். பைனான்ஸ் தொழிலும் பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 1 மணியளவில் சசிக்குமாரின் வீட்டிற்கு வந்த இரண்டு நபர்கள் அவரை வெளியே வரசொல்லி அழைத்துள்ளனர். அப்போது வெளியே வந்த சசிக்குமாரை, இருவரும் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

சசிக்குமாரின் அலறல் சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தனர். ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த செல்வபுரம் காவல்துறையினர் சசிகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை தொடர்பாக செல்வ புரத்தைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் ராம்ஜி மற்றும் இளங்கோவன் ஆகிய இருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

முதல் கட்ட விசாரணையில் சசிக்குமாரின் கடையில் ராம்ஜி மற்றும் இளங்கோவன் இருவரும் வாடிக்கையாக வந்து சென்றுகொண்டிருந்தனர். இந்த நிலையிலே சசிகுமாரிடம் ராம்ஜி ரூ.5லட்சம் வட்டிக்கு பணம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

பணத்தைத் திருப்பி கேட்ட சசிகுமாருக்கும் ராம்ஜிக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறு காரணமாக சசிக்குமார் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விஜய் போல பாஜக பகல் கனவு காண்கிறது.. ஜெயக்குமார் சரமாரி பேச்சு!

2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…

2 hours ago

வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!

சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…

3 hours ago

’இனி எந்த போராட்டமும் இல்லை’.. விஜயலட்சுமி வெளியிட்ட கடைசி வீடியோ!

சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…

3 hours ago

மீனாட்சி செளத்ரிக்கு அரசாங்கம் அடித்த ஆர்டர்? உண்மை நிலவரம் என்ன?

நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…

4 hours ago

அமைச்சர் என் குடும்பத்தைப் பற்றி அப்படி பேசினார்.. மருத்துவரின் மனைவி கண்ணீர் மல்க பேட்டி!

கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…

5 hours ago

This website uses cookies.