குணத்துல தங்கம் சார்.. மக்கள் மனதை வென்ற சமந்தா.. பலரும் அறியாத தகவல்..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. அப்படி பிரபல நடிகையாக இருந்தாலும், அடிக்கடி பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இருந்தாலும், வெளியே தெரியாத அளவுக்கு சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

நடிகர் நாகசைதன்யாவுடன் விவாகரத்துக்கு பிறகு, சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். ‘புஷ்பா’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஒ அண்ட்டா வா மாவா’ என்ற பாடல் இந்தியா முழுவதும், அவரை பிரபலமாக்கியது. தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது, ரசிகர்களின் கனவு கன்னியாக இருக்கும் சமந்தா, ஒரு சமயத்தில் ஆயிரம் ரூபாய்க்காக திருமண மண்டபத்தில் பன்னீர் தெளிக்கும் வேலையை செய்திருக்கிறாராம். அதன் பிறகு தான் மாடலிங் செய்து சினிமா துறைக்குள் வந்துள்ளார். அவர் நடித்த முதல் தெலுங்கு திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது. அதன்பிறகு தமிழிலும் பானா காத்தாடி போன்ற திரைப்படங்களில் நடித்து அவர் சிறிது சிறிதாக முன்னேறத் தொடங்கினார்.

அந்த சமயத்தில் அவருக்கு மணிரத்னம் இயக்கிய கடல் மற்றும் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஐ திரைப்படத்திலும் சமந்தாவுக்கு நடிக்கு வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால், அப்போது கடுமையான தோல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா அந்த படங்களில் நடிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது. அதன் பிறகு சில மாதங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சமந்தா நன்றாக குணமடைந்து மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
அதன் பின்னர், 2012-ம் ஆண்டு ‘பிரதியுஷா’ எனும் தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தார்.

தன்னைப் போன்று மக்கள் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்ற எண்ணத்தில் அவர் வசதி இல்லாத மக்களுக்கு பல மருத்துவ உதவிகளை செய்ய ஆரம்பித்தார். மேலும் இந்த நிறுவனம் நிறைய மருத்துவமனைகள் உடன் உடன்படிக்கை ஏற்படுத்தி அதன் பெயரில் வசதி இல்லாத மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் அவர் பெண்கள், குழந்தைகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பல சேவைகளை செய்து வருகின்றார். அதேநேரத்தில் உயிருக்காக போராடும் பல குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றும் நோக்கிலும் இந்த நிறுவனம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

ஆதரவற்ற முதியவர்களுக்கு கண் அறுவை சிகிச்சை முகாம் உட்பட பல இலவச மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்வதில் இந்த தொண்டு நிறுவனம் பல மருத்துவமனைகளுக்கு சப்போர்ட்டாக இருந்து வருகிறது. ரத்ததான முகாம்கள், இலவச இதய அறுவை சிகிச்சை போன்றவற்றிலும் சமந்தா ஆரம்பித்த இந்த நிறுவனம் தன்னால் இயன்ற உதவியைச் செய்து வருகிறது. அப்படி பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா பல சர்ச்சைகளில் சிக்கி வந்தாலும் வெளியே தெரியாத அளவுக்கு பல நல்ல விஷயங்களை மக்களுக்காக செய்து வருகிறார். இந்த நல்ல குணத்தால் தான் இன்று அவர் ஒரு முன்னணி நட்சத்திரமாக இருக்கிறார் என்று அவரைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?

அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…

3 minutes ago

இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…

5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

1 hour ago

திமுகவும், கைக்கூலிகளும் வக்பு சொத்தை அபகரித்துள்ளனர் : பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு!

பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…

1 hour ago

காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்றம் சென்று மீண்டும் அதே இடத்தில் நடத்துவோம் : பாஜக பிரமுகர் எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…

2 hours ago

வடிவேலு கூட அப்படி ஆகிடுச்சு? மத்தவங்க இருந்ததுனால தப்பிச்சேன்- கவர்ச்சி நடிகை ஓபன் டாக்

வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…

2 hours ago

This website uses cookies.