விழுப்புரம் சாலாமேடு பகுதியில் இயங்கி வரும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்பொழுது அங்குள்ள மாணவர்கள் வகுப்பறை சென்று ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு என்ன குறை என கேட்டறிந்தார். அப்பொழுது சாலை வசதியும் குறித்த நேரத்திற்கு வர பேருந்து வசதியும் ஏற்படுத்திக் கொடுக்க மாணவர்கள் அமைச்சர் பொன்முடி இடம் வலியுறுத்தினர்.
பின்னர் மாணவர்கள் கோரிக்கையை ஏற்று உன்னுடைய நடவடிக்கை
எடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து அங்குள்ள பேராசிரியர்களும் மாணவர்கள் சேர்க்கை குறைவாக இருப்பதாக கேட்டிருந்த பொழுது ஊருக்கு அப்பால் இருப்பதால் மாணவர்கள் சேர்க்கை சற்று குறைவாக காணப்படுகிறது என அவர்கள் தெரிவித்தனர்
பின்னர் இதுகுறித்து அமைச்சர் பொன்முடி செய்தியாளிடம் தெரிவிக்கையில், தமிழ்நாட்டில், உள்ள 13 பல்கலைக்கழகங்களில் வரவிருக்கின்ற கல்வியாண்டில் அனைத்து வகையான கல்லூரிகளிலும் ஒரே வகையான கட்டணங்கள் நிர்ணயிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.
ஒரே மாதிரி தேர்வு முறை, ஒரே மாதிரி கட்டணம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தரிடம் பேசி உள்ளேன் விரைவில் அதை செயல்படுத்தப்படும் என்றார்.
இந்த ஆய்வின் போது மாவட்டஆட்சியர் டாக்டர் சி.பழனி, விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.