Categories: தமிழகம்

இனி பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரி தேர்வு, ஒரே மாதிரி கட்டணம் : அமைச்சர் பொன்முடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

விழுப்புரம் சாலாமேடு பகுதியில் இயங்கி வரும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்பொழுது அங்குள்ள மாணவர்கள் வகுப்பறை சென்று ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு என்ன குறை என கேட்டறிந்தார். அப்பொழுது சாலை வசதியும் குறித்த நேரத்திற்கு வர பேருந்து வசதியும் ஏற்படுத்திக் கொடுக்க மாணவர்கள் அமைச்சர் பொன்முடி இடம் வலியுறுத்தினர்.

பின்னர் மாணவர்கள் கோரிக்கையை ஏற்று உன்னுடைய நடவடிக்கை
எடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து அங்குள்ள பேராசிரியர்களும் மாணவர்கள் சேர்க்கை குறைவாக இருப்பதாக கேட்டிருந்த பொழுது ஊருக்கு அப்பால் இருப்பதால் மாணவர்கள் சேர்க்கை சற்று குறைவாக காணப்படுகிறது என அவர்கள் தெரிவித்தனர்

பின்னர் இதுகுறித்து அமைச்சர் பொன்முடி செய்தியாளிடம் தெரிவிக்கையில், தமிழ்நாட்டில், உள்ள 13 பல்கலைக்கழகங்களில் வரவிருக்கின்ற கல்வியாண்டில் அனைத்து வகையான கல்லூரிகளிலும் ஒரே வகையான கட்டணங்கள் நிர்ணயிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.

ஒரே மாதிரி தேர்வு முறை, ஒரே மாதிரி கட்டணம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தரிடம் பேசி உள்ளேன் விரைவில் அதை செயல்படுத்தப்படும் என்றார்.

இந்த ஆய்வின் போது மாவட்டஆட்சியர் டாக்டர் சி.பழனி, விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வார தொடக்கத்தில் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (மார்ச் 10) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 50…

10 minutes ago

ராஷ்மிகாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்? மத்திய அரசுக்கு சமூக அமைப்பு பரபரப்பு கடிதம்!

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம்…

46 minutes ago

அந்த மாதிரி ஐடியா இல்லங்க.. ஐசிசி சாம்பியன் டிராபியில் இந்தியா படைத்த மொத்த சாதனைகள்!

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். துபாய்: 9வது ஐசிசி…

2 hours ago

ரோகித்தின் மோசமான உலக சாதனை.. தீயான குல்தீப் யாதவ்.. திணறிய நியூசிலாந்து.. இந்தியாவுக்கு 252 ரன்கள் இலக்கு

ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…

17 hours ago

மனவருத்தம் இல்லை.. ராஜ்ய சபா சீட் விவகாரத்தில் பிரேமலதா அதிரடி பதில்!

ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…

18 hours ago

திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!

சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…

20 hours ago

This website uses cookies.