அதே இடம்.. அதே வேட்பாளர்கள் : 2 தொகுதிகளிலும் விசிக பானை சின்னத்தில் போட்டி… திருமாவளவன் அறிவிப்பு!
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டார்.
சென்னை அசோக் நகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சிதம்பரம் தொகுதியில் தொல். திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் திருமாவளவன் கூறியதாவது, 2 தொகுதிகளிலும் பானை சின்னத்தில் போட்டியிடுகிறோம். 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் நாட்டின் வளர்ச்சியில் எந்த முன்னேற்றமும் இல்லை. பாஜக ஆட்சியில் பொருளாதார வீழ்ச்சி அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது.
பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சிறு குறு தொழில் வளர்ச்சி சரிவு கண்டுள்ளது. நாடு முழுவதும் பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது என்றார்.
சிதம்பரம் தொகுதியில் 6-வது முறையாக திருமாவளவன் போட்டியிடுகிறார். கடந்த முறை சிதம்பரம் தொகுதியில் 3,2,19 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் வெற்றி பெற்றிருந்தார். கடந்த முறை விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட ரவிக்குமார் 1,28,068 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடல் ப்ரோமோ வெளியீடு! நடிகர் அஜித் குமார் நடிப்பில்,இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்…
கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…
திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…
திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…
This website uses cookies.