திருச்சி : இம்மாதம் இறுதிக்குள் மணல் குவாரிகள் திறக்கப்பட விட்டால் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் உடனடியாக மணல் குவாரிகளை திறந்துவிட வலியுறுத்தி தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜாமணி மற்றும் நிர்வாகிகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் இன்று பொதுப்பணித்துறை அதிகாரி சந்தித்து மனு கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநிலத் தலைவர் ராஜாமணி,
தமிழகம் முழுவதும் மணல் குவாரிகள் முடங்கி உள்ளதால் தனியார் மற்றும் அரசு கட்டுமானப் பணிகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
எனவே அத்துணை பணிகளும் தொடர்ந்து தடையின்றி நடைபெற கோரி லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட கோரியும் நீர்வளம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சரிடம் நேரில் சென்று மனு கொடுத்தோம்.
அவர்கள் 10.1.22ஆம் அன்று தமிழகம் முழுவதும் 16லாரி குவாரிகள் மற்றும் 21 மாட்டு வண்டிகளும் இயங்கும் என தெரிவித்தார். ஆனால் இதுவரை இயங்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதுதொடர்பாக இன்று பொதுப்பணித் துறை அதிகாரி சந்தித்து மனு கொடுத்துள்ளோம். இம்மாதம் 30ம் தேதிக்குள் குவாரிகள் செயல்படுத்தவில்லை என்றால் அடுத்த மாதம் ஏப்ரல் 4ம் தேதியன்று முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.