நெல்லை நாங்குநேரி விஜய நாராயணம் அருகே உள்ள வெங்கட்ராயபுரம் குளத்தில் மர்ம நபர்கள் மணல் திருடுவதாக கடந்த 17ஆம் தேதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு, விரைந்து சென்ற போலீசார் பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் அள்ளிக்கொண்டிருந்த நபர்களை பிடிக்க முயன்றனர். உடனே அவர்கள் பொக்லைன் இயந்திரம், பைக் ஆகியவற்றை அப்படியே விட்டுவிட்டு தப்பி சென்று விட்டனர்.
இது தொடர்பாக, விஜயநகரம் போலீசார் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த திமுக பிரமுகர் கங்கை ஆதித்தன் உட்பட சிலரை தேடி வந்தனர். இந்நிலையில், கங்கை ஆதித்தன் அவரது வீட்டில் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, விஜய நாராயணன் இன்ஸ்பெக்டர் நாககுமாரி தலைமையில் போலீசார் அவரது வீட்டிற்கு சென்றனர்.
போலீசார் கதவை தட்டிய போது கங்கை ஆதித்தனின் மனைவி கதவை திறந்தார். போலீசாரை வீட்டுக்குள் அனுமதிக்காமல் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் வாக்குவாதம் செய்தனர். சுற்றி வளைத்ததை அறிந்த கங்கை ஆதித்தன் அறைக்குள் உள்பக்கமாக பூட்டிக் கொண்டு பதுங்கினார். இதனால், மணல் கொள்ளையனை கைது செய்ய முடியாமல் நாலு மணி நேரமாக போலீசார் திணறினார்கள்.
முன்னதாக, கங்கை ஆதித்தனை கைது செய்ய கதவை போலீசார் உடைத்தனர். அப்போது கங்கை ஆதித்தன் தான் நிர்வாணமாக நின்றால் போலீசார் கூச்சப்பட்டு வரமாட்டார்கள். அதனால், தப்பிவிடலாம் என எண்ணி ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்றதாக கூறப்படுகிறது. ஆனாலும், போலீசார் பின்வாங்காமல் கங்கை ஆதித்தனை குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். பின்னர் போர்வையை போத்தி அவரை அழைத்து சென்றனர். போலீஸ் வாகனத்தில் அவரை அழைத்துச் சென்றனர்.
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏற்பட்ட ஒரு கேள்வியின் காரணமாக கடும்…
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது சினிமா அறிமுகத்திலேயே அவர் வாங்கி இருக்கும் சம்பளம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.தெலுங்கு…
அதிமுக உடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சரியான நேரம் வரும்போது, அதை தெரியப்படுத்துவோம் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.…
தூத்துக்குடி அருகே காதலை கைவிட்டுச் சென்ற இளம்பெண்ணை தீக்கிரையாக்கி கொன்ற இளைஞர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி:…
This website uses cookies.