நெல்லை நாங்குநேரி விஜய நாராயணம் அருகே உள்ள வெங்கட்ராயபுரம் குளத்தில் மர்ம நபர்கள் மணல் திருடுவதாக கடந்த 17ஆம் தேதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு, விரைந்து சென்ற போலீசார் பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் அள்ளிக்கொண்டிருந்த நபர்களை பிடிக்க முயன்றனர். உடனே அவர்கள் பொக்லைன் இயந்திரம், பைக் ஆகியவற்றை அப்படியே விட்டுவிட்டு தப்பி சென்று விட்டனர்.
இது தொடர்பாக, விஜயநகரம் போலீசார் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த திமுக பிரமுகர் கங்கை ஆதித்தன் உட்பட சிலரை தேடி வந்தனர். இந்நிலையில், கங்கை ஆதித்தன் அவரது வீட்டில் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, விஜய நாராயணன் இன்ஸ்பெக்டர் நாககுமாரி தலைமையில் போலீசார் அவரது வீட்டிற்கு சென்றனர்.
போலீசார் கதவை தட்டிய போது கங்கை ஆதித்தனின் மனைவி கதவை திறந்தார். போலீசாரை வீட்டுக்குள் அனுமதிக்காமல் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் வாக்குவாதம் செய்தனர். சுற்றி வளைத்ததை அறிந்த கங்கை ஆதித்தன் அறைக்குள் உள்பக்கமாக பூட்டிக் கொண்டு பதுங்கினார். இதனால், மணல் கொள்ளையனை கைது செய்ய முடியாமல் நாலு மணி நேரமாக போலீசார் திணறினார்கள்.
முன்னதாக, கங்கை ஆதித்தனை கைது செய்ய கதவை போலீசார் உடைத்தனர். அப்போது கங்கை ஆதித்தன் தான் நிர்வாணமாக நின்றால் போலீசார் கூச்சப்பட்டு வரமாட்டார்கள். அதனால், தப்பிவிடலாம் என எண்ணி ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்றதாக கூறப்படுகிறது. ஆனாலும், போலீசார் பின்வாங்காமல் கங்கை ஆதித்தனை குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். பின்னர் போர்வையை போத்தி அவரை அழைத்து சென்றனர். போலீஸ் வாகனத்தில் அவரை அழைத்துச் சென்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.