கள்ளக்குறிச்சி அருகே நள்ளிரவில் ஆற்று மணல் எடுக்க வந்த வெளி மாநில லாரிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்களால் பரபரப்பு நிலவியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது ஜம்பை கிராமம். இந்த கிராமத்தில் நேற்று இரவு கர்நாடகா பதிவெண் கொண்ட 5க்கும் மேற்பட்ட லாரிகள் தென்பெண்ணை ஆற்றில் மணல் ஏற்ற வந்துள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஜம்பை கிராம மக்கள் இரவு லாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, திருவண்ணாமலையில் அரசு சார்பில் வெட்டப்படும் குளத்திற்கு லாரிகளில் ஆற்றுமண் ஏற்றி செல்வதாக லாரியில் வந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள், அரசு வேலைக்கு மணல் எடுப்பது என்றால் பகலில் எடுக்க வேண்டியதுதானே? இரவில் எடுப்பதற்கான நோக்கம் என்ன? இரவில் எடுப்பதற்கு யாரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆற்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகள், ஜேசிபி வாகனங்களை பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பி உள்ளனர். தற்போது, இந்த வீடியோ காட்சிகள் ரிஷிவந்தியம் பகுதியில் உள்ள சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
இதனை அடுத்து, அங்கு வந்த மணலூர் பேடை போலிசார் நள்ளிரவில் மணல் ஏற்றச் சென்ற லாரிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி பொது மக்களை சமாதானப்படுத்தினர். ஆனால், இதுவரை மணலூர்பேட்டை போலீசார் லாரிகளை பறிமுதல் செய்யாமல், அது குறித்து எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ காட்சிகள் அடிப்படையில் லாரி மற்றும் ஜேசிபி வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.