அரசு நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் திமுக முக்கிய பிரமுகர்களின் பெயரில் மண் திருட்டு அரங்கேறி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நெரூர் என்.புதுப்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றங்கரையோரத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அரசு நிலத்தில் சுமார் 3 மாத காலமாக சவுடுமண் திருட்டு அரங்கேறி வருகின்றது.
நாள் ஒன்றுக்கு 150 முதல் 200 லாரிகள் வரை நடைபெறும் மண் திருட்டு நடைபெற்று வருகின்றது. இந்த மண் திருட்டு குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் மட்டுமில்லாது, சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளிடத்தும் புகார் தெரிவித்தும், எந்தவித பயனுமில்லை.
எனவே, இந்த சம்பவம் குறித்தும் இந்த மண் கடத்தல் குறித்தும், மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திமுக பிரமுகர்களின் பெயரில் நடைபெறும் இந்த மண் திருட்டு சம்பவத்தினை அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கனிம வளக்கொள்ளையை கட்டுப்படுத்த முடியும் என்றும், ஆகவே துரித நடவடிக்கை எடுத்து கனிமவளத்தினை காக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.