விழுப்புரம் : கடத்தி வந்த 10 கிலோ சந்தன கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
விழுப்புரம் அருகே உள்ள தொரவி மதுவிலக்கு சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை போலீசார் நிறுத்த கூறிய போது வாகனத்திலிருந்து ஒருவர் இறங்கி தப்பி ஓடியுள்ளார்.
இதனையடுத்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சென்னகிருஷ்ணாவை போலீசார் பிடித்து விசாரனை செய்தனர். விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகேயுள்ள ஆயோத்தியாபட்டினம் கிராமத்தை சார்ந்த மலைவாழ் சமூகத்தை சார்ந்த சென்ன கிருஷ்ணா 10 கிலோ எடை கொண்ட சந்தன கட்டை துண்டுகளை சாக்கு பையில் மூட்டையாக கட்டி புதுச்சேரிக்கு எடுத்து செல்வதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து சந்தன கட்டை துண்டுகளை கடத்திய சென்ன கிருஷ்ணாவை போலீசார் கைது செய்து சந்தன கட்டைகளை பறிமுதல் செய்து விழுப்புரன் வனத்துறை சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
சந்தன கட்டை கடத்தல் தொடர்பாக மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன் விசாரனை மேற்கொண்டு சென்ன கிருஷ்ணா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் தப்பியோடிய முருகேசனை போலீசார் தேடி வருகின்றனர். சந்தன கட்டை கடத்தலில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் குற்றவாளியிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.