சேலம் – சங்ககிரி காவல் நிலையத்தில் திடீரென பட்டாசு வெடித்ததில் மியாமத்துல்லா என்பவர் உயிரிழந்ததோடு, புகார் கொடுக்க வந்த பவானியைச் சேர்ந்த பரத் என்பவர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்டம் சங்ககிரி சரக காவல்நிலையத்தில் நாளை சங்ககிரி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவர்களின் ஆய்வு நடப்பதையொட்டி, காவல்நிலையம் முழுவதும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு காவல் நிலையம் வலது பக்கத்தில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் எரிந்து கொண்டிருந்தபோது, திடீரென மர்மப் பொருள் வெடித்ததில் காவல்நிலையம் மேற்கூரை தகரம் கிழிந்தது விழுந்தது.
அப்போது, காவல் நிலையம் அருகில் சுத்தம் செய்து கொண்டிருந்த சங்ககிரியைச் சேர்ந்த நியமத்துல்லா என்பவரின் வயிற்றில் காவல் நிலையத்தின் மேற்கூரை தகரம் கிழித்ததில் பலத்த காயம் அடைந்து சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், காவல் நிலையத்தில் சாலை விபத்து வழக்கு சம்பந்தமாக வந்த பவனியைச் சேர்ந்த பரத் என்பவருக்கு வலது பக்க தொடையில் காயம் ஏற்பட்டு சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் தொடர்பாக சங்ககிரி காவல் ஆய்வாளர் தேவி சங்ககிரி உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜா ஆகியோர் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் தகவலறிந்து விரைந்து வந்த சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் கபிலன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதனால் சங்ககிரி காவல் நிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.