தமிழகம்

நானும் அப்போ உச்ச நடிகர் தான்.. வம்பிழுத்து பார்க்கும் சரத்குமார்!

நான் அரசியலுக்கு வந்தபோது நானும் உச்ச நடிகராக தான் இருந்தேன் என நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் கூறியுள்ளார்.

சென்னை: சென்னையில் இன்று (நவ.15) நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “1996ஆம் ஆண்டு தமிழகத்தில், இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியை எதிர்த்து, தனிமனிதனாக நான் அரசியலுக்கு வந்தேன். அன்றைக்கு என்னைப் போன்று யாருக்கும் அந்த தைரியமும், திராணியும் கிடையாது.

அந்த நேரத்தில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறுவது போல நானும் உச்ச நடிகர்தான். மிகப்பெரிய ரசிகர்கள் எனக்கு இருந்தனர். அதிகமான ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து ஒரு படத்தைப் பார்ப்பது என்றால், அது என்னுடைய படத்தை மட்டும்தான். அந்த நேரத்தில் தான் நானும் அரசியலுக்கு வந்தேன்.

அதிகமான ரசிகர்கள் இருந்த நேரத்திலும், பெரிய பெரிய வெற்றிப் படங்களைக் கொடுத்த போதிலும் நான் அரசியலுக்கு வந்தேன். அதற்கு காரணம் மக்கள் சேவை மட்டுமே. ஜெயலலிதாவை யாரும் எதிர்க்கவே முடியாது என்று அப்போது கூறினார்கள், என் வீட்டில் கல்லெறிந்து தாக்குதல் நடத்தினார்கள், மலத்தைக் கழித்து ஊற்றினார்கள், ஆனாலும், நான் 40 நாட்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்தேன்.

அதேபோல், நான் தனியாக அரசியல் கட்சி தொடங்கிய போது, இரு மாபெரும் தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்தோம் (அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி). எனவே, என்னைப் பொருத்தவரையில், எதுவும் சாத்தியம், உழைப்பும் உறுதியும் இருந்தால் மட்டும். உலக அளவில் இந்தியாவுக்கு இன்றைக்கு மிகப்பெரிய புகழ் கிடைத்திருக்கிறது என்றால், அதற்கு காரணம் பிரதமர் நரேந்திர மோடி.

சர்வதேச அவில் இந்தியர்களின் பெருமை உயர்ந்துவிட்டது. முந்தைய ஆட்சிக்கும், பாஜக ஆட்சிக்கு வந்தபிறகும், தமிழக மீனவர்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். பாதிப்புகள் குறைந்துகொண்டே தான் வருகிறது. இலங்கை அரசுக்கு மிகப்பெரிய உதவியாக இருந்ததால் தான் பொருளாதார ரீதியாக அந்த நாடு வலுவான நிலையில் இருக்கிறது,” எனக் கூறினார்.

இதையும் படிங்க: காதலிப்பவர்கள் கட்டிப்பிடிப்பது குற்றமல்ல.. கோர்ட் அதிரடி கருத்து!

முன்னதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பேசிய அதன் தலைவரும், நடிகருமான விஜய், என்னுடைய கேரியரில் உச்சத்தில் உள்ளபோது அரசியலுக்கு வந்துள்ளேன் எனக் கூறியிருந்தார். மேலும், சரத்குமார், இந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு, பாஜகவோடு இணைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

10 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

10 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

10 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

11 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

11 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

11 hours ago

This website uses cookies.