காஞ்சிபுரம் புதிய ரயில்வே மேம்பாலம் அருகே 36 வயதுடைய இளைஞர் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் நாராயண பாளையத் தெருவை சேர்ந்தவர் துரைசாமி. இவரின் மகன் பிரபாகர் (36). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரகாஷ் என்ற பட்டு சேலை கடையில் பணிபுரிந்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக எலக்ட்ரீசியன் தொழிலில் ஈடுபட்டு கொண்டே, ஆரணி போன்ற இடங்களில் பட்டுசேலை வாங்கி வந்து விற்பனை செய்தும் வருகிறார். அதேபோல் வாடிக்கையாளர்களின் பழக்கத்தினால் பட்டு சேலை புரோக்கராகவும் இருந்து வந்துள்ளார்.
திருமணமான சில மாதங்களிலேயே இவருடைய மனைவி கோமதி என்பவர் பிரிந்து சென்று விட்ட காரணத்தால், தனது பெற்றோர்களுடன் நாராயணபாளையம் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று வழக்கம்போல் பணிக்கு சென்ற பிரபாகர் இரவு வீடு திரும்பவில்லை. இந்நிலையில் காஞ்சிபுரம் புதிய ரயில்வே நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் இரத்த காயங்களுடன் வாலிபர் சடலம் இருப்பதாக பொதுமக்கள் காஞ்சிபுரம் தாலுகா காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தாலுக்கா காவல்துறையினர் ரத்த காயங்களுடன் இருந்த உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டதில் நாராயணபாளைய தெரு பகுதியினை சேர்ந்த பிரபாகர் என்பது தெரியவந்தது. மேலும் காவல்துறையினர் அவரது வீட்டில் சென்று இத்தகவலை உறுதி செய்தனர்.
ரத்த காயங்களுடன் இருந்த உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மோப்பநாய் உதவியுடன் சம்பவ இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர். மோப்பநாய் புதிய ரயில்வே நிலையம் அருகே வரை சென்று விட்டு திரும்பியது. பிரபாகர் காயங்களுடன் இறந்தது குறித்து அவரது நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட நபர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபாகர் தலையின் இரண்டு இடத்தில் காயங்கள் இருப்பதால் கடன் தொல்லை காரணமாக யாராவது அடித்துக் கொன்றார்களா? அல்லது போதையில் விழுந்து அங்கிருந்து கல் குத்தி இறந்து போனாரா என்ற ரீதியிலும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.