அரசுப் பள்ளியில் குழந்தைகளுக்கு பாடம் நடத்தாமல் சேலை வாங்கும் ஆசிரியர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவுவில் சிங்கய்யன்புதூர், 10 நம்பர் முத்தூர், கோதவாடி, தாமரை குளம், கோவில்பாளையம், முள்ளு பாடி, அரசம்பாளையம், பகவதி பாளையம், வீரப்ப கவுண்டனூர் என சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பள்ளி குழந்தைகள் கிணத்துக்கடவு அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ளது, 1500 மாணவ, மாணவிகள் உள்ளனர். பள்ளியில் 65 ஆசிரியர்களும், தலைமை ஆசிரியராக தேன்மொழி என்பவரும் பணியாற்றி வருகின்றார்.
இந்த நிலையில், பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு பாடம் நடத்தாமல் சேலை வாங்கும் மும்மரத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ள சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வகுப்பறையில் ஆசிரியர்கள் சேலை வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வருகிறது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.